மீண்டும் இணைகிறார்கள் ஸ்ரீகாந்த், பிருதிவிராஜ்
‘கனா கண்டேன்’ படத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்த், பிருதிவிராஜ் இணைந்து ‘வலம்’ என்ற படத்தில் நடிக்கிறார்கள்.
இதில் எதிரும் புதிருமான போலீஸ் அதிகாரிகளாக இருவரும் வருகிறார்கள். இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என்று விறுவிறுப்பான திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் மன்மோகன் கூறுகிறார்.
மிடுக்கான போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீகாந்த். கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடலை இறுக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிருதிவிராஜீடன் கமலினி முகர்ஜி, சஞ்ஜனா, காதல் தண்டபாணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு இசை விஷ்வா, படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத். படப்பிடிப்பு விசாகப்பட்டினம், சென்னை, காயல்பட்டினம், கொச்சின் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|