தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை
தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை என இயக்குனர் அழகப்பன்.சி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
அமீர்கானின் தாரே ஜமீன் பார் திரைப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியில் இதேபோல் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தமிழில் குழந்தைகளை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
இந்தக் குறையை தீர்க்கும் வகையில் வண்ணத்துப்பூச்சி என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை இயக்கி வருகிறேன். பெரியவர்கைன் சிந்தனையை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்கள் விரும்பும் துறையில் அவர்களை சாதனையாளர்களாக மாற்றுவது பற்றியது தான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் நிச்சயம் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்யும் என்றார் அவர்.
|