முன்னணி ஹீரோவான சுந்தர்.சி
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் முன்னணி ஹீரோவாகி விட்டார் சுந்தர்.சி. இயக்குனராக இருந்தபோது வாங்கியதை விட அதிக சம்பளம் வேறு வாங்குகிறாராம்.
இயக்குனர் சுந்தர்.சி. நடித்து வெளியான தலைநகரம், வீராப்பு, சண்டை போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் டைரக்ஷன் செய்வதை ஒத்திவைத்து விட்டு தொடர்ந்து நடிப்பது என அவர் முடிவு செய்துள்ளாராம்.
சுந்தர்.சி.யின் படங்கள் தயாரிப்பாளர்களின் கல்லாவை நிரப்பியதால் அவரின் மார்க்கெட் வேகமாக உயர்ந்து வருகிறது. பெருமாள், தீ, ஐந்தாம்படை என அடுத்தடுத்து ஆறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஒரு படத்திற்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இயக்குனராக இவர் வாங்கியதை விட இது அதிகம் என்பது தான் இதில் விசேஷம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|