15 நாட்களில் 20 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி
ரஜினி குசேலன் படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கியது தான் கோடம்பாக்கத்தில் தற்போது பரபரப்பு செய்தியாக பேசப்படுகிறது.
சிவாஜி படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றார் ரஜினிகாந்த். சிவாஜி படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தார் அவர்.
தற்போது வெளியாகவுள்ள குசேலன் படத்திற்காக ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 20 கோடி. இந்தப் படத்திற்காக வெறும் பதினைந்து நாட்களே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அவர்.
இதன் மூலம் ரஜினியின் சம்பளம் ஒருநாளைக்கு ஒன்றரைகோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகமாம். கோடம்பாக்கத்துக்காரர்கள் இப்படி கணக்கு போட்டுக் கொண்டிருக்க வாங்கிய சம்பளத்தை இந்நேரம் நல்லபடியாக முதலீடு செய்திருப்பார் சூப்பர்ஸ்டார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|