இந்தியில் பிரபலமாகும் ஜெனீலியா
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அசத்திய ஜெனீலியா இப்போது இந்தியிலும் வேகமாக முன்னுக்கு வருகிறார்.
இந்தியில் அவர் கதாநாயகியாக நடித்து வெளியான ‘ஜானே தூ... யா ஜானே னா' படம் பெரும் வெற்றியடைந்துள்ளது. இது, தமிழில் பிரசாந்த்-ஷாலினி நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்' படத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து அவர் மேலும் இரண்டு இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், அவரைத் தேடும் தமிழ் தயாரிப்பாளர்களிடம் ‘இப்போதைக்கு கால்ஷீட் இல்லை’ என்று கூறி வருகிறாராம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|