இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறும் சுந்தர்.சி
தொடர்ந்து ரவுடி வேடங்களில் நடித்து வந்த இயக்குனர் சுந்தர்.சி. தனது அடுத்த படமான ‘தீ’ யில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார்.
தலைநகரம், சண்ட என தொடர்ந்து சுந்தர்.சி. ரவுடி வேடங்களில் நடித்து வந்தார். ஒரே மாதிரி வேடங்களில் நடிப்பது ரசிகர்களுக்கு சலிப்பைத் தரும் என்று நண்பர்கள் சொன்ன அறிவுரையை அடுத்து தனது அடுத்த படத்தில் தனது கேரக்டரை மாற்றியிருக்கிறார்.
அடுத்த படமான ‘தீ’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறாராம். அதிலும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வந்து ஆக்சனில் கலக்கியிருக்கிறாராம். படத்தில் கதாநாயகி ராகிணி மலேசிய அழகிப் போட்டியில் முதல் பரிசு பெற்றவராம்.
|