சௌந்தர்யா
ஸ்நேகிதன்
நேற்று சௌந்தர்யா என்னுடன்
படுக்கையிலிருந்தாள்
பாதங்களிலிருந்து உச்சி வரை நுகர்ந்த
என் செயலுக்கு
கைவிரல்களில் சிக்கி விரிப்புகள் கசங்கின
தன்னை வீணாக்கியவனென்று
அவளால் சொல்லப்பட்டவன்
திறக்காமலே கொண்டு சென்று விட்ட
பேரன்பின் இரகசிய அறைகளை
தேடும் வேட்கை
அவளின் கண்களில் தெரிந்தது
நானும் இறக்கி வைத்தாக வேண்டும்
கால்களில் மென்மையாகப் படர்ந்திருந்த
ரோமங்களை
உதடுகளால் கவ்வி இழுத்தேன்
சன்னலுக்கு வெளியே மிதந்த
நட்சத்திரங்களில் ஏதோ ஒன்றில்
ஒளியாய்க் கலந்தோம்.
உள்ளும் புறமும் குளிர்ந்து கிடந்த
விடியற்காலையில்
எவ்வளவு மறுத்தும் திரும்பத் திணித்தாள்
கசங்கிய ரூபாய்களை
கதவுகள் திறந்ததும்
காத்திருந்த வெளிச்சம்
தாவிப் பாய்ந்தது
மிச்சங்களைத் தின்பதற்காக
மெலிதாகப் புன்னகைத்து விடை பெற்றாள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|