Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006
தலையங்கம்

புதுவகை எழுத்துக்கான உரையாடலில் ஆர்வமுடன் கலந்து கொள்ள வந்த வா.மணிகண்டன், இசை, இளஞ்சேரல், சக்தி, மிதுன், பாலமுருகன், கோவிந்தன் மற்றும் கடிதம் தொலைபேசி வாயிலாக விசாரித்த அனைத்து இளம் படைப்பாளிகளின் உற்சாகம், ‘சிறுகதைகளின் காலம் முடிந்து போய்விட்டது’ என்ற வெற்று ஆரவாரங்களைப் போக்கி, மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. விரைவில் உரையாடல்களையும் அதற்கான செயல்பாடுகளையும் ஊக்கத்துடன் வடிவமைப்போம்.

உன்னதம்


நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை
(தனிச்சுற்றுக்குமட்டும்)
இருமாத இதழ்
இதழ்-15 ஜன-பிப் 2006

ஆசிரியர், வெளியிடுபவர்:
கௌதமசித்தார்த்தன்
இதழ் வடிவமைப்பு:
மைத்ரேயி

ஒருங்கிணைப்பாளர்கள்:
கன்னடம்:
திரு.விவேக்சான்பாக்
ஆசிரியர்: தேசகாலா (கன்னடஇலக்கியஇதழ்)
திரு.நஞ்சுண்டன்
பெங்களூர்
மலையாளம்:
திரு.ப.ஈ.ராமகிருஷ்ணன்
திரு.ஈழ்.ரகுராம்
கேரளா

சந்தா விவரம்
தனிஇதழ் ரூ.15
ஆண்டுச் சந்தா ரூ90

உன்னதம்
ஆலத்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி-638 455
ஈரோடு மாவட்டம்.

[email protected]
[email protected]
தொலைபேசி: 04256-243125
செல்பேசி: 9443224945
இந்த இதழில் மேலும் மூன்று புதிய பத்திகளும், சிறப்புப் பகுதி ஒன்றும் அறிமுகமாகின்றன.

தமிழ் எழுத்து வரலாற்றிலேயே முதன் முறையாக அரவாணித் தோழர் ப்ரியாபாபு அவர்களால், தங்களது வாழ்வியலின் எழுதப்படாத பக்கங்கள் உங்கள் முன்னே விரிகின்றன. இதுவரை அரவாணிகள் குறித்த கொச்சையான படிமங்களும், பறவைப் பார்வையுமாகவே ஊடகங்களால் ஊதிப் பெருத்த விஷயங்கள் நிராகரிக்கப் படவேண்டிய சூழலை உருவாக்குகிறார் அவர். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட அவர்களது உடல் சார்ந்த மொழி தமிழின் நவீன எழுத்து தளத்தில் பதியட்டும். இதுவரை மறைக்கப்பட்ட அவர்களது பண்பாடும், வழக்காறுகளும், தொன்மங்களும், படிமங்களும், மொழியும், இசையும் வரலாற்றைப் புரட்டிப் போடட்டும்.

காலங்காலமாய் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட பெண் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அது எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் தனக்கே உரித்தான மொழியில் எழுத வருகிறார் சுகிர்தராணி. அதேபோல டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் சமூக அக்கரை சார்ந்த கலை இலக்கியம், அரசியல், மாற்றுச் சிந்தனைகள், விளிம்பு நிலையாடல்கள் குறித்தெல்லாம் எழுதுகிறார்.

‘அண்டை வீட்டார்’ என்னும் சிறப்புப் பகுதியில் மலையாள, கன்னட இலக்கியத்தின் இளைய தலைமுறைப் படைப்பாளிகள் சிலரைத் தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படைப்பாளியாக, தமது மொழியில் நடக்கும் நடப்பு நிலை குறித்தும், கலை இலக்கியம், அரசியல், மாற்றுச் சிந்தனைகள், விளிம்பு நிலையாடல்கள், தலித்தியம், பெண்ணியம் ஆகிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வைக்கிறது. இந்தப் பகுதியின் ஒருங்கிணைப்பாளர் களாக திரு.விவேக் சான்பாக் (ஆசிரியர்-தேசகாலா. கன்னட இலக்கிய இதழ்) திரு.நஞ்சுண்டன், பெங்களூர். மற்றும் திரு.டி.டி.ராமகிருஷ்ணன், திரு.டாக்டர்.டி.எம்.ரகுராம், கேரளா ஆகியோர் ஆர்வத்துடன் இசைவு தெரிவித்தும் படைப்புகள் பெற்றுத் தந்தும் உறுதுணையளித்தார்கள். மிக்க நன்றி.

அடுத்த இதழில், கன்னடப் படைப்பாளி திரு. அரவிந்த மாளஹத்தி எழுதுகிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com