புல்லாங்குழல்
நவகவி
புல்லாங் குழலினிலே - உள்ளது
நாத ஜீவித மே!
மனிதன் குரல்வளையே - பார் ஒரு
கீத ஆலயமே!
காற்றில் - தேன் - ஊற்றும்
ராகம் பாரு
விண்ணில் உன்னை ஏற்றும் (புல்லாங்)
கேள் கீதம்
புல்லாங் குழலின் ராஜ ராகம்!
துளை மீது
மனித இதழ்கள் செய்யும் யாகம்!
குழல் இசை உறங்குது! இதழ் அதை எழுப்புது!
திசைகளும் திரும்புது! செவிபெறும் வரம் இது
கேள்நீ இசை கேட்டால்
நிலவைத் தீண்டும்
தோள் தோள் பார் உன் தோள் (புல்லாங்)
ஆதியிலே
மாடு மேய்த்தாள் இயற்கை அன்னை!
குழல் எனவே
ஏந்தி னாளே மனிதன் தன்னை!
மனிதனாம் குழலிலே, எத்தனை ஓசைகள்!
வானமே குனிந்தது, கேட்டிடும் ஆசையில்!
ஒன்பது துளை(க்)குழல்
அல்லவா அல்லவா
மனித கீத(க்)கடல்
மனித மகன் உடல்! (புல்லாங்)
குழல் இசை பார்
இறந்த மூங்கில் எழுப்பும் நாதம்!
தியாகிகளின்
விலா எலும்பும் குழலாய் மாறும்!
கொடுமையை எதிர்த்தொரு தியாகியாய் மாறு நீ!
குழல் என எலும்புகள், ஆய்விடும் பாரு நீ!
இசை அதைக் கேட்டால்
சிலிர்க்கும் பாரு
சவத்தின் ரோமக் கால்! (புல்லாங்)
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|