|
பாரதியார் பாடல்கள்
மாயையைப் பழித்தல்
[ராகம் - காம்போதி] [தாளம் - ஆதி]
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ
மாயையே - மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது
மொன்றுண்டோ - மாயையே. 1
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன்
நிற்பாயோ - மாயையே. 2
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் – மாயையே! 3
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே - இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்
செய்வாய் – மாயையே! 4
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப
மாயையே - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ - மாயையே. 5
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே. 6
என்னிச்சை கொண்டுனௌ யெற்றிவிட
வல்லேன் மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்- மாயையே. 7
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தேர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன்
உன்னை - மாயையே. 8
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|