 |
கவிதை
கசப்பின் வலி நேயா
உயிர்ப்பை
நிரூபிக்க, செத்துக் காண்பிக்க
வேண்டியிருக்கிறது.
மாதவிலக்கென்பதை
மறைத்து வாடிக்கையாளனை
அழைக்க வைக்கிறது.
சாக்கு போதுமானதாய்
இருக்கிறது காசல்ல,
குடிக்க
விவாகரத்தை
பற்றிப் பேசிய இரவில்
கனவில் வந்து தொலைக்கிறாள்
என்னை யாசித்த பெண்
கற்பழிக்கிறவன் தருகிற
முத்தமென விமர்சனங்கள்
கடவுள் மட்டுமே மிச்சமிருக்கிற
நம்பிக்கைகளின்
குதிரைகள் சாத்தான்களாய் இருக்கின்றன.
நெஞ்செரிய புகைத்து
கழிகிறது கசப்பின் வலி...
- நேயா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|