Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

பேரழிவு
ம.ஜோசப்

Man in sad கடலையொட்டிய ஒரு மலைப் பகுதியில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடலோடு படுத்து உறங்குபவர்கள் நாங்கள்.

கடல் சம்பந்தப்பட்ட பணிபுரியும் ஒரு அரசாங்க
அலுவலரின் பிழையால்
ராட்சத மிருகங்கள் மலைகளுக்குள்
பிரவேசிக்க ஆரம்பிக்கின்றன.

எங்கும் பெரு மழை, வெள்ளம், பேரழிவு
தொடங்கியிருந்தது.
எங்கும் மக்கள் கூட்டம் சிதறி ஓட ஆரம்பித்தது.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள்-
மரண பயத்தால் ஓட ஆரம்பித்திருந்தனர்.
நோவா காலத்து பெரு வெள்ளம் போலுள்ளது.

வெள்ளம் வராது, பேரழிவு வராது என
பொய்களை கூறிய
அரசாங்கத்தினரை மக்கள் வெள்ளம்
சபித்தபடியே ஓடிக் கொண்டிருக்கிறது,
போக்கிடம் தெரியாமல்.
இயேசு கூறிய கடைசி கால
அழிவு ஆரம்பித்து விட்டது,
என எண்ணியபடி ஓட ஆரம்பிக்கின்றேன்.

தெளிவாக கணக்கிட முடியாத
காலங்களுக்கு அப்புறம், நான்
ஒரு மழை வாழிட கிராமத்தில் இருக்கின்றேன்.

எங்கும் பிணங்கள், சிதிலங்கள், இடிபாடுகள்-
ஒரு பெரும் சமூதாயமே ஏறக்குறைய அழிந்து போனது,
என அறிகிறேன்.
என் குடும்பமும் முற்றிலுமாக அழிந்து போனது
என அறிகிறேன்.

எனக்கு அருகே ஒரு பெண்-
என்னைப் போல் தப்பித்தவள்
அவர்கள், அவளை என் மனைவி எனக் கொள்கின்றனர்.

வானொலியில் அழிவு பற்றிய
செய்திகளை அறிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினர் அனைவரும்
அழிந்து போயினர்.
ஆனாலும் புதியவர்களால்
அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

எனக்கு அந்த சிறு வயது கிராம அதிகாரி
"செங்கோலன்" எனப் பெயரிடுகிறான்.
பிறந்த தேதி 10 அல்லது 19 எனக் கூறுகிறேன்.
அரசாங்க ஏடுகளில் அவற்றைப்
பதிவு செய்யும் அதிகாரி அவன்.
மிகுந்த எரிச்சலுடன் காணப்படுகிறான்.

இரவானதும், அம்மக்கள் எங்களுக்கு
உணவு கொண்டு வருகின்றனர்.
உணவைப் பார்த்ததும் எனக்கு 'சுய நினைவு' வருகிறது.
'ஆ', உணவு எனக் கத்துகிறேன்.
என் புதிய மனைவியும், மற்ற அனைவரும்
கொல்லென சிரிக்கின்றனர்.

நான் திடுக்கிட்டு விழித்து விடுகிறேன்.
பெரும் திகிலும், மனக் கிலேசமும்,
சூழ்ந்து என்னை அமிழ்த்துகின்றன.


- ம.ஜோசப் ([email protected])



இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com