 |
கவிதை
நானும் காதலும் - 3
கோகுலன்
பசுமை போர்த்திய
பள்ளத்தாக்குப் பெருவெளியில்
ஆசுவாசமாய் அமர்ந்து கதைக்கும்
இரு மேக நிழல்களினூடே
பேசுபொருளாயிருக்கிறது
நம் காதல்
இருள் கவிழ்ந்த பின்னிரவில்
நிசப்தத்தைக் கிழித்தபடி
திரைச்சீலை விலக்கியவாறு அறைக்குள் புகும்
சுவர்க்கோழிகளின் சீண்டல் கொக்கரிப்பில்
மீண்டுமாய் பொங்கி வழியத் துவங்குகிறது
விழித்துக்கொண்ட நம் காதல்
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|