 |
கட்டுரை
அயலாள் ஆதவன் தீட்சண்யா
பால் புகட்டும் அம்மாவுக்குள்ளிருந்து
பதறியெழும் பெண்ணொருத்தி
மாராப்பை கவனமாய் திருத்திய பின்
தண்ணீரை மட்டுமே துவட்டவல்ல
டவல் கொடுத்து விரட்டும் போதிருந்து
தாளிட்டுக்கொண்டு குளிக்கத் தொடங்குகிறான்
அதுவரை மகனாயிருந்த ஆண்
நறுமணம் கரைந்தோடும் சோப்புநுரைக்குள்
உரையாடலற்று விரைத்துக் கிடக்கின்றனர்
தாயும் மகனும்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|