யாழன் ஆதி
பிரிவு: தலித் முரசு - ஜூலை 2005

மண்போர்த்திய உடலெங்கும்
பாளபாளமாய்
வெடித்துக் கிடக்கிறது பசி
பசியின் நாவில் மிஞ்சுகிறது
உயிரின் சுவை
இமைகளைத் தைத்த வறுமையின்
ஊசிமுனையில் சுழல்கிறது
வாழ்வதற்கான நம்பிக்கை
வற்றிய அடிவயிற்றில்
கைவைத்து நிரப்பிக் கொள்கிறது
பசித்த மானிடம்
நிலங்களைப் பறித்து
உணவினை அபகரித்து
வறுமையை விளைத்துச் சென்றவன்கள்
எவன்கள்?
காற்றை மெல்கின்றன
நரநரவென பற்கள்
கயவன்களின் நினைப்பில்