2016ஆம் ஆண்டில் சமூக நீதிக்குக் குழிப் பறித்த மோடியின் கல்விக் கொள்கைகள் குறித்த ஒரு தொகுப்பு.

•             தகவல் தொழில்நுட்பக் கல்வியை முன்னிறுத்திப் புதிய கல்விக் கொள்கையை 1986-ல் ராஜிவ் காந்தி அரசு அறிவித்தது. இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் அடித்தளம் அதில் போடப்பட்டது. அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக 43 பக்கங்களைக் கொண்ட ‘புதிய கல்விக் கொள்கை 2016’ முன்வரைவு வெளியிடப் பட்டது.

•             ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்னும் யோசனை, குலக் கல்வியை மீட்டுரு வாக்கம் செய்யும் முயற்சியாகும். இந்தியக் கலாசாரக் கூறுகளைத் தக்கவைப்பதாகச் சொல்லிச் சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப் பாட மாக்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது.

•             நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 10 லட்சம் வரையிலான காலி யிடங்கள் நிரப்பப்படாமலே இருப்பது 2016இல் தெரியவந்தது. அதிலும் 1 இலட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் ஓராசிரியர் பள்ளி களாக இயங்கிவருவதால் கிட்டத்தட்ட 5 இலட்சம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும் 900 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங் களில் தற்காலிகமான நியமனத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை பார்த்துவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாகக் கல்விக் கொள்கை திருத்தியமைக்கப்படாததுதான் என மத்திய அரசு சொன்னது.

•             ஆனால், சமீபகாலமாக நூற்றுக் கணக்கான இணைப்புக் கல்லூரிகள் (ஹககடயைவநன) முளைத்துவிட்டன. ஒரு பல்கலைக் கழகத்தின் கீழ் எத்தனை இணைப்புக் கல்லூரிகள் செயல் படலாம் என்பதற்கான வரையறை தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே முதல் கட்டமாக நிரந்தரப் பணி யிடங்களை நிரப்ப முடியும். இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ஆசிரியர்களை நியமித்தால் மட்டும் போதாது; சரியான உள்கட்டமைப்பு வசதிககளைப் பூர்த்தி செய்தால்தான் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்!

•             ஆசிரியர்களின் திறன்; வளாக நேர்முகத் தேர்வு மூலமாக வேலை வாய்ப்பு தரும் விகிதம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்து ஆசியாவின் மிகச் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சென்னை ஐ.ஐ.டி. உட்பட 6 ஐ.ஐ.டி. நிறுவனங்கள் இடம் பிடித்தன. ஆனால் உலகத் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவில் ஒரு பல்கலையும் இடம் பெற வில்லை. ஜம்மு, பாலக்காடு, திருப்பதி, தார்வாட், பிலாய், கோவா ஆகிய 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், 2015-16 கல்வி ஆண்டில் மட்டும் 656 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களிலிருந்து பாதி யிலேயே படிப்பைக் கைவிட்ட அவலமும் நடந்தது. அய்.அய்.டி. அறிவியல் படிப்புக்கு ‘சமஸ்கிருதம்’ அவசியம் என்று கூறி, அய்.அய்.டி.களில் சம°கிருதத்தை ஒரு பாடமாக்கியது மோடி ஆட்சி.

•             பிளஸ்டூவில் 500-க்கு 444 எடுத்து பீஹாரின் முதல் மாணவியாக வந்தவர் ரூபா ராய் . “அரசியல், அறிவியல் பாடம் என்பது சமையல் கலை சம்பந்தப்பட்டது” என்று முதலிடத்தில் வந்த மாணவி சொன்னபோது அவர் மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தேர்வு முறையும் கேள்விக்கு உள்ளானது. அவரைப் போலவே பீஹாரில் 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதி இன்றி மாநிலத்தின் முதலிடம் பிடித்திருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.

                முதலிடம் பிடித்த ரூபா ராய், அறிவியல் பாடப் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த ஒரு மாணவர், எப்படி முதலிடத்துக்கு வந்தார்? மாநிலத் தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உஷா சின்ஹா, விஷூன் ராய் கல்லூரி முதல்வர் பச்சா ராய் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பெற்றோர், தேர்வு நடைபெறும் அறையின் வெளிப்புறச் சுவரில் ஏறி ஜன்னல் வழியாகத் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பதில் சொல்லித் தருவதில் தொடங்கி, பீஹாரில் தேர்வு முறையில் ஏகப்பட்ட மோசடிகள் நடந்தேறுவது இதன் மூலம் அம்பலமானது.

•             இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. சி.பி.எ°.இ. அல்லாத தனித்த பாடத் திட்டம் கொண்ட மாநிலங் களான தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகியவை இனிமேல் சி.பி.எ°.இ. முறைப்படி அமைக்கப்பட்ட நுழைவுத் தேர்வான ‘நீட்’ எழுத வேண்டும். சி.பி.எ°.ஈ. பாடத் திட்டத்தில் நடத்தப்படும் இந்தத் தேர்வால் பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்கள், வேறு ஒரு போட்டித் தேர்வை சந்திக்க வேண்டும்; போட்டித் தேர்வுக்கான பயிற்சிக்கு பல ஆயிரம் செலவிடவேண்டும்.

                கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் எழுத லாம் என அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே இத்தேர்வை நடத்தலாம் என்கிற கோரிக்கையும் கடுமையாகப் படித்துப் பிளஸ்டூ தேர்வை முடித்த மாணவர்களை மீண்டும் அழுத்தத்துக்கு ஆளாக்கக் கூடாது என்கிற எதிர்ப்புக் குரலும் விடாமல் ஒலித்துக் கொண்டிருக் கின்றன. இப்போது வரும் ஆண்டி லிருந்து பொறியியல் பட்டப் படிப்புக்கு நாடு முழுதும் பொது நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டுவரப் போவதாக மோடி ஆட்சி அறிவித்துள்ளது. கல்வி வியாபாரம் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து நமக்குக் கவலை ஏதும் இல்லை. அரசு கல்லூரிகளில் படிக்க வரும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்ற பிறகும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்ற வடிகட்டும் முறை தான் கொடுமையானது.

•             ஒடுக்கப்பட்ட சமூகத்தி லிருந்து வந்து கல்வியின் உயர்ந்த நிலையை அடையப் போராடியவர்களில் மறக்க முடியாத இருவர் ரோஹித் வெமுலாவும் கன்யா குமாரும். ரோஹித் வெமுலா நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். பல இன்னல் களைத் துணிச்சலாக எதிர் கொண்டு மாணவர்களின் அரசியல் முன்மாதிரியாக மாறியிருக்கிறார் கன்யா. “இந்திய ஜனநாயகத்துக்குப் பலம் சேர்த்த மாணவர்கள்” என்ற அடிப்படையில் கன்யா குமாருக்கும் மறைந்த ரோஹித் வெமுலாவுக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரோம் ஷர்மிளா 2016 கல்வி உதவித்தொகையைக் கடந்த மார்ச் மாதம் வழங்கியது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த ஆண்டில் கல்வித் துறையில் பெரும் முன் னேற்றம் என்று சொல்லத்தக்க அம்சங்கள் குறை வாகவே இருந்தன. ஊழல்கள், அரசியல் தலையீடுகள், கொள்கை சார்ந்த குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் நம்பிக்கை தரும் சில சலனங்களும் இருந்தன என்பதே 2016 கல்விக் களத்தின் யதார்த்தம்.