விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த காரணத்தால் ஒரு வார காலம் நாடாளுமன்றம் முடங்கியது. ஒரு வழியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க முன் வந்தார். பண வீக்கம் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், ஒன்றிய ஆட்சியின் நிதி கொள்கையால் மாநிலங்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று சாதித்த தோடு, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதா என்று கட்சி அரசியலைப் பேசி தமிழ் நாட்டுக்கு சவால் விட்டார். இறுமாப்புடன் பேசிய நிர்மலா சீதாராமன் உரைக்கு பதிலளிக்கும் வகையில் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஆக.9) சேலம் தரணிதரன் (திராவிடத் தொழில் மன்ற இயக்குனர்) பதிலளித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துகள்:

இத்திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு நிதி அதிகாரம் தேவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்படு கிறது.

வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு ஒன்றிய ஆட்சிக்கு வரியாக செலுத்தும் ஒரு ரூபாயில் தமிழ்நாட்டுக்கு ஒன்றியம் திருப்பி வழங்குவது 30 காசுகள் மட்டுமே. அதே நேரத்தில் உ.பி.க்கு 2 ரூபாயும், பீகாருக்கு 3 ரூபாயும் ஒன்றிய ஆட்சி வழங்குகிறது. தன்னிச்சையாக விதிக்கப்படும் ‘செஸ்’, ‘சர்-சார்ஜ்’ வரிகளில் மாநிலங்களுக்கு பங்கு கிடையாது. இந்த வரிகளை 2011-2012லிருந்து 2020-2021 வரை ஒன்றிய ஆட்சி இரு மடங்காக உயர்த்தி நிதியை தன்னிடம் மட்டுமே வைத்துக் கொண்டது. கூட்டாட்சி அமைப்பை சிதைக்கும் நிதிக் கொள்கையை ஒன்றிய அரசு மாற்றியமைக்க முன்வர வேண்டும்” என்று கட்டுரை கூறுகிறது. (தமிழில் ‘இரா’)

தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் தடைகளையும் மீறி தமிழ்நாடு ஒன்றிய ஆட்சி யின் மோசமான பொருளாதாரக் கொள்கை களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பணவீக்கத்துக்குக் காரணமான வரி விதிப்புகளை அதிகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமாக தள்ளுபடிகளையும் வரிவிலக்கையும் வாரி வழங்கி யிருக்கிறது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை நிர்மலா சீதாராமன் இறுமாப்புடன் குற்றம் சாட்டி சவால் விடுகிறார்.