அரசியின் கோடை கால அரண்மனை

இந்தியாவிலேயே முதன்முதலாக 1950 ஏப்ரல் 15 இல் மதுரையில் ஜவஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது மதுரை காந்தி மியூசியம். மியூசியம் அமைந்த பிரமாண்ட கட்டிடம் மதுரை அரசி ராணி மங்கம்மாள் கோடை கால அரண்மனை. 

காந்தி சர்வ சமயப்பிரார்த்தனை செய்யச் சொல்லுவார். வழிபாட்டிற்காக கோயிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் வந்திருக்கிறார். மதுரையில்தான் அவர் அரை ஆடை உடுத்தும் தீர்மானத்தைக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தான் நடந்தது. காந்தி மியூசியத்தில் மகாத்மா பயன்படுத்திய உண்மையான 14 பொருட்கள் மற்றும் அவர் குண்டடிபட்டு விழுந்தபோது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த மேலங்கியும் இன்னும் பல பொருட்களும் உள்ளன. விடுதலைப் போராட்ட சித்திரங்கள், புகைப்படங்கள், ஆஸ்ரமம் மற்றும் அஸ்தியைக் கொண்ட மாதிரி நினைவிடங்கள் உள்ளன. 24 ஆயிரம் கடிதப் பிரதிகளைக் கொண்ட நூலகமும் காந்தி மியூசியத்தில் உள்ளன.

இந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு

 அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள சைரோ தொகுதியில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 31 மணிநேர வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. 2003 ஏப்ரல் 2ம்நாள் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மறுநாள் மதியம் 2 மணிக்குத்தான் முடிவடைந்தது. இந்தியாவின் நீண்ட வாக்குப்பதிவு இதுதான்.

- வைகை அனிஷ்