தேவையான பொருட்கள்:

கேரட் - 4
சின்ன வெங்காயம் - 10
பாசிப்பருப்பு - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பால் - 100 மில்லி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மைசூர் பருப்பு - 2 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

கேரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

குக்கரில் ஆவி அடங்கியதும், வடிகட்டி, அரைத்து, பின்னர் மீண்டும் அதே வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை ஆகியவைச் சேர்த்து பரிமாற வேண்டும்