ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை. ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?” என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்”