தன்னில் தொலைந்த
ஆணைப் பற்றி
அவள் அறிந்தே இருக்கிறாள்...

தொலையாத பெண்ணின்
குறிப்புக்களை அவள்
வாசித்தபடியே இருக்கிறாள்...

வார்த்தைக‌ளின் பின்வாசல்களை
அடைத்தே இருக்கிறாள்...

தொலையாததைக் கொண்டு
தொலைந்ததைத் தேட‌
அவள் என்றுமே
முயன்றதில்லை...

ஈர்ப்பு விசை விதிகளை
அவள் ச‌ரிபார்த்த‌தில்லை...

ஊராரின் முன் ந‌ட‌க்கையில்
செவிக‌ளை அடைக்க‌
அவள் என்றுமே ம‌ற‌ப்ப‌தில்லை...


- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It