Brain7 முதல் 12 வயதுடைய குழந்தைகளின் உடலில் செயற்கையாக வலியை உண்டாக்கி மூளையின் fMRI ஸ்கேன் எடுத்தார்கள். வலியை உணரும் மூளையின் பகுதியில் ஒரு ஒளிர்தல் காணப்பட்டது.

அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் வன்முறைக் காட்சியைப் பார்த்தபோதும் இந்தக் குழந்தைகளுக்கு மூளையின் அதே பகுதியில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது குழந்தைகள் அடுத்தவர்களுடைய வலியை தன்னுடைய வலியாக உணர்ந்தார்கள்.

மேலும், சமூக உணர்வுகள் மற்றும் நியாய அநியாயங்களுக்குப்பொறுப்பான மூளையின் பகுதியான the medial prefrontal cortex and the temporoparietal junction களிலும் ஒளிர்தல் காணப்பட்டன.அதாவது அடுத்தவர்களுக்கு வலி ஏற்படுத்துவது தவறு என்ற உணர்வை இயல்பிலேயே குழந்தைகள் பெற்றிருந்தார்கள்.

இதனால்தான் குழந்தைகளை தெய்வங்கள் என்கிறோம். ஆனால் இயல்பிலேயே முரடர்களாக இருக்கும் குழந்தைகளை முரட்டு தெய்வங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், இவர்கள் அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தி அதில் சுகம் காணுகிறார்கள்.

சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையை fMRI ஸ்கேன் செய்து இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள். ஆளுமையை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முதல் முறையாக fMRI ஸ்கேன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிகாகோ பல்கலைக்கழக மனநலம் மற்றும் மனோதத்துவ பேராசிரியர் ஜீன் டெசிட்டி கூறுகிறார்.

குற்றச்செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் பிறழ்மனம் கொண்ட இளையோருக்கு சிகிச்சையளிப்பதில் இந்த ஆய்வு உதவுகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மூளையின் பகுதிக்கு amygdala and ventral striatum என்று பெயர்.

மனிதர்களின் சுயகட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் மூளையின் பகுதிக்கு the medial prefrontal cortex and the temporoparietal junction என்று பெயர்.

இந்த ஆய்வில் 16 முதல் 18 வயதுடைய எட்டு முரட்டு சுபாவமுடைய இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஆயுதங்களை ஏந்தி சண்டையில் ஈடுபடுபவர்களாகவும், குற்றச்செயலகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர்.

இதே வயதுடைய இயல்பான எட்டு இளைஞர்களும் ஆய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடுத்தவருடைய காலை வேண்டுமென்றே ஒருவர் மிதித்து வலிஉண்டாக்குவது போன்ற வீடியோ காட்சி இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியே போட்டுக் காட்டப்பட்டது. காட்சியைப் பார்க்கும்போது அவர்களின் மூளை fMRI ஸ்கேன் எடுக்கப்பட்டது.

முரட்டுசுபாவம் உடைய இளைஞர்களின் மூளையில்மட்டும் amygdala and ventral striatum நரம்பணுத்தொகுதிகளில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது முரடனுக்கு வன்முறைக் காட்சிகளால் மகிழ்ச்சி ஏற்பட்டது. the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் அதுபோன்ற ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை. அதாவது நியாயம்-அநியாயம் பற்றிய எந்த உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை.

இயல்பான சுபாவம் உடைய இளைஞர்களின் மூளையின் the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் மட்டும் ஒளிர்தல் காணப்பட்டது. amygdala and ventral striatum என்ற மூளையின் பகுதியில் ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை.

ஆக, பிறக்கும்போது தெய்வமாக இருந்தவன் போகப்போக, முரட்டு தெய்வமாக மாறிப்போகிறான். அதாவது, மிருகமாக மாறிப் போகிறான் என்பதுதான் இன்றைய அறிவியல் நமக்கு உணர்த்தும் உண்மை.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி