Bisphenol A (BPA) ம‌ற்றும் Epoxy Resins என்ப‌து பிளாஸ்டிக் தயாரிக்க‌ உத‌வும்  தொழிற்சாலை வேதி பொருளாகும். உண‌வு ம‌ற்றும் பானங்களை வைத்திருக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் பாலி கார்போனேட் (Poly Carbonate) பிளாஸ்டிக்கினால் உருவாக்க‌ ப‌ட்டுள்ள‌ பிளாஸ்டிக் த‌ண்ணீர் பாட்டில்க‌ள், பிளாஸ்டிக் குழ‌ந்தைக‌ளின் பால் குப்பிக‌ள், பிளாஸ்டிக் கோப்பைக‌ள், பொம்மைக‌ள் ம‌ற்றும் ப‌ல‌ வீட்டு உப‌யோக‌ப் பொருட்க‌ளிலும் இது காண‌ப்ப‌டுகிற‌து.

மேலும் Epoxy Resins உண‌வுப் பொருட்க‌ளை வைக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் உலோக‌ பொருட்க‌ளில் உள் பூச்சிகாக‌வும், த‌ண்ணீர் கொண்டு செல்லும் குழாய்க‌ள் உள் பூச்சிகாக‌வும், பாட்டில்க‌ள் உள் பூச்சிகாக‌வும், பொம்மைக‌ள், சில‌ காகித‌ பொருட்க‌ளிலும் ம‌ற்றும் ப‌ல் ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சில க‌ல‌வைக‌ள், பூச்சிக‌ளுக்காவும் Epoxy Resins ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன. மேற்க‌ண்‌ட‌ BPA த‌ண்ணீர், உண‌வு பொருட்க‌ள் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்க‌ளிலிருந்து உண‌வு பொருட்க‌ளுட‌ன் க‌ல‌ந்து  ந‌ம் உட‌லுக்குள் செல்கின்ற‌ன.

இவ்வாறு உட‌லுக்குள் செல்லும் BPA வினால் ஆண் ம‌ல‌ட்டு த‌ன்மை, இன‌ப்பெருக்க‌ குறைபாடுக‌ள், பெண்க‌ளுக்கு இருத‌ய‌ நோய்க‌ள், ஆண்க‌ளுக்கு ஹார்மோன் ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய்க‌ள், இர‌ண்டாம் ர‌க‌ நீர‌ழிவு, மூளை ச‌ம்ப‌ந்த‌மான‌வைக‌ளான‌ நியாப‌க‌மின்மை, க‌ல்வி க‌ற்க‌ இய‌லாமை, ம‌ன‌ அழுத்த‌ம், பெண் க‌ரு முட்டை ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய‌க‌ள், மார்ப‌க‌ புற்று நோய், ஆஸ்துமா போன்ற‌ நோய்க‌ளும், குறைபாடுக‌ளும்  ஏற்ப‌ட‌ வாய்ப்புள்ள‌ன‌.

நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் பொருட்க‌ளில் ஒட்டியுள்ள‌ வேதிப் பொருளே இந்த‌ அள‌வு பாதிப்பை ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆகையால் வேதிப் பொருட்க‌ள் க‌ல‌ந்துள்ள‌தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தை த‌விர்ப்ப‌து உட‌ல் ஆரோக்கிய‌த்திற்கு ந‌ல்ல‌து.

30 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு உமிக‌ரி கொண்டு ப‌ல் துல‌க்கிய‌ கால‌த்திலும் ப‌ல் ச‌ம்ப‌ந்த‌மான ‌ பிர‌ச்ச‌னைக‌ள் சில‌ருக்கு இருந்த‌து என்ப‌து உண்மை தான். ஆனால் த‌ற்போதுள்ள‌ அள‌விற்கு இருந்த‌தா? என்ப‌து தான் கேள்வி. 30 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பை விட‌ த‌ற்போது ம‌க்க‌ள் தொகை அதிக‌ரித்து விட்ட‌து ஆகையால் அத‌ற்கு ஏற்ப‌ ப‌ல் நோயாளிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்து இருக்க‌லாம் என்ப‌து ஓர் அள‌விற்கு உண்மை தான். ஆனால் த‌ற்போது வீட்டிற்கு இர‌ண்டு அல்ல‌து மூன்று ப‌ல் நோயாளிக‌ள் உள்ளார்க‌ள். வேதி பொருட்க‌ளால் த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌ ப‌ற்ப‌சைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்த‌ தொட‌ங்கிய‌த‌ற்கு பிற‌கு தான் ந‌ம் அனைவ‌ருக்கும் இந்த‌ நிலை. ஆக‌ வேதிப் பொருட்க‌ளை கொண்டு தயாரித்த‌வைக‌ளால் ந‌ன்மைக‌ள் சில‌ இருந்தாலும் தீமைக‌ள் தான் அதிக‌ம் உள்ள‌து என்ப‌து இந்த‌ ப‌ல் நோயாளிக‌ளின் பெருக்க‌த்திலிருந்து அறிய‌ முடிகிற‌து.

அப்ப‌டியென்றால் ப‌ற்ப‌சை ப‌ய‌ன்ப‌டுத்த‌ கூடாதா என்ற‌ கேள்வி எழும். இங்கு ப‌ற்ப‌சை பிர‌ச்ச‌னை இல்லை, வேதிப் பொருட்க‌ள் தான் பிர‌ச்ச‌னை. ஆகையால் வேதிப் பொருட்க‌ள் குறைவாக‌ உள்ள‌ டாப‌ர், மிஸ்வாக் போன்ற‌ ப‌ற்ப‌சைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். மேலும் எங்க‌ளிட‌ம் கூட‌ மிக‌ மிக‌ குறைவான‌ அள‌வில்  வேதிப் பொருட்க‌ள் க‌ல‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ சிறு க‌ற்றாழையை முக்கிய‌ மூல‌ப் பொருளாக‌ கொண்டும், ஓர் இந்திய நிறுவ‌ன‌மான‌ யெத்துரூ நிறுவ‌ன‌த்தால் தயாரிக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் த‌ர‌ம் மிகுந்த‌ ப‌ற்ப‌சைக‌ள் கிடைக்கின்ற‌ன‌.

மேற்க‌ண்ட‌ ப‌ற்ப‌சையை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ற் க‌றை இருந்தால் போய்விடும். ப‌ற் கூச்ச‌ம் இருக்காது. வாய் துர்நாற்ற‌ம் வெகு நேர‌த்திற்கு வ‌ராம‌ல் பாதுகாக்கும்.

1.வேதிப் பொருளே இல்லாத‌ அல்ல‌து குறைவாக‌ க‌ல‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ உண‌வை தேர்ந்தெடுந்து உண்ணுங்க‌ள்.

2.அன்றாட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்ற‌வைக‌ளில் வேதிப் பொருட்க‌ள் இல்லாத‌ அல்ல‌து குறைவாக‌ உள்ள‌வ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள்

3.சின்ன‌ஞ்சிறு உபாதைக‌ளுக்கெல்லாம் ‌ வைத்திய‌த்தை குறிப்பாக‌ ஆங்கில வைத்திய‌த்தை நாடுவ‌தை த‌விர்த்து விடுங்க‌ள்.

4.உண‌வு உண்ணும் போது உண்ணுப‌வ‌ரும் யாருட‌னும் பேச‌ வேண்டாம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் உண்ணுப‌வ‌ருடன் பேச‌ வேண்டாம்.

5.உண‌வு உண்ணும் போது செய்தி தாள், தொலைகாட்சி, வானொலி, தொலைபேசி, புத்த‌க‌ங்க‌ள் முத‌லிய்வைக‌ளை முற்றிலும் த‌விர்க்க‌ வேண்டும்.

6.குளித்து அரை ம‌ணி நேர‌ம் வ‌ரை சாப்பிட‌ வேண்டாம்.

7.சாப்பிட்டால் இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌த்திற்கு குளிக்க‌க் கூடாது.

8.சாப்பிடுவ‌த‌ற்கு 30 நிமிட‌ங்க‌ளுக்கு முன்பும், சாப்பிட்ட‌ பிற‌கு 10 வ‌ரையிலும் த‌ண்ணீர் ப‌ருகுவ‌தை த‌விர்த்து விடுங்க‌ள். சாப்பிட்ட‌வுட‌ன் த‌ண்ணீர் ப‌ருக‌த் தான் வேண்டும் என்ற‌ ப‌ழ‌க்க‌த்தை விட்டு விடுங்க‌ள். சாப்பிடும் நேர‌ங்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் தேவைக்கு த‌ண்ணீரை ப‌ருகி கொள்ளுங்க‌ள்.

9.ப‌சித்தால் ம‌ட்டுமே உண‌வு உட்கொள்ளுத‌ல் ந‌ல்ல‌து. ஆனால் ப‌சித்தும் உண‌வு உட்கொள்ளாம‌ல் இருப்ப‌து நீங்க‌ள் உங்க‌ள் உட‌லுக்கு செய்யும் துரோக‌ம்

10.உண‌வை வாயில் வைத்த‌ பிற‌கு உத‌டுக‌ள் பிரியாம‌ல் நிதான‌மாக‌ மென்று விழுங்குக‌ள். இப்ப‌டி செய்வ‌தால் உமிழ் நீர் சுர‌ப்பு அதிக‌ரிக்கும்.

11.மேலும் நிதான‌மாக‌ மெல்லும் போது நாவில் உள்ள‌ சுவை மொட்டுக‌ள் வ‌ழியாக ச‌த்துக்க‌ள் உறிஞ்ச‌ப்ப‌டும்.

12.உண‌வு உண்ணும் போது உண‌வில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் இருக்க வேண்டும்.

13.உண‌வை ப‌ரிமாறுகிற‌வ‌ர்க‌ளும், தாய்மார்க‌ளும் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுட‌ன் சேர்ந்து சாப்பிட‌ வேண்டாம்.ஏனென்றால் உண‌வை ப‌ரிமாறுகிற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சாப்பாட்டில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் ப‌ரிமாறுவ‌திலும், தாய்மார்க‌ள் குழ‌ந்தைக‌ள் என்ன‌ சாப்பிடுகிறார்க‌ள் எவ்வ‌ள‌வு சாப்பிடுகிறார்க‌ள் என்ப‌தில் தான் க‌வ‌ன‌ம் செலுத்துவார்க‌ள்.

14.சாப்பிட்டின் தேவை ஆளுக்கு ஆள் மாறுப‌டும். ஆகையால் இத்த‌னை கிராம் தான் சாப்பிட‌ வேண்டும் என‌ நிர்ண‌ய‌ம் செய்ய‌ இய‌லாது. அவ‌ர‌வ‌ர் தேவைக்கு சாப்பிட்டு கொள்ளுங்க‌ள். ஏப்ப‌ம் வ‌ந்துவிட்டால் சாப்பாட்டை நிறுத்தி விடுவ‌து ந‌ல்ல‌து.

15.அதோடு உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌தை சாப்பிட்டுக் கொள்ளுங்க‌ள்.

16.சாப்பாடு என்ப‌து எப்போது அறுசுவை கொண்டதாக‌ இருக்க‌ வேண்டும். அத‌ற்காக‌ தின‌மும் வ‌டை பாயாச‌த்துட‌ன் எப்ப‌டி சாப்பிட‌ முடியும் என்ற‌ கேள்வி எழ‌லாம். ஆறு சுவை தான் முக்கிய‌மே த‌விர‌ வ‌டை, பாயாச‌ம் இல்லை. பாயாச‌த்திற்கு ப‌திலாக‌ சிறு வெல்ல‌க்க‌ட்டியை சாப்பிட‌லாம்.

17.த‌ண்ணீர் ப‌ருகுவ‌த‌ற்கு கொடுக்கும் முக்கிய‌த்தை விட‌ கூடுத‌ல் முக்கிய‌த்துவ‌ம்  உமிழ் நீரை விழுங்குவ‌த‌ற்கு கொடுங்க‌ள்.

சுவாச‌க் காற்று

1. காற்றோட்ட‌ம் உள்ள‌ இட‌ங்க‌ளில் உற‌ங்க‌ வேண்டும். கொசுவிற்காக‌ ச‌ன்ன‌ல்க‌ளை மூடி வைத்துக் கொண்டு உற‌ங்குவ‌து பாதிப்பை தான் ஏற்ப‌டுத்தும்.

2. சுவாச‌த்திற்கு தீங்கும் இழைக்கும் கொசி விர‌ட்டிக‌ளை ப‌ய்ன்ப‌டுத்திக் கொண்டு உற‌ங்க‌ கூடாது.

த‌ண்ணீர்

1.மின‌ர‌ல் இல்லாத‌ மின‌ர‌ல் வாட்ட‌ர் விற்க‌ப்ப‌டும் த‌ண்ணீர் குடிப்ப‌தை த‌விர்த்து விடுங்க‌ள்.

2.வெண்ணீரை கூட‌ த‌விர்த்துக் கொள்ளுங்க‌ள்.

3.த‌ண்ணீர், பான‌ங்க‌ள் ப‌ருகும் போதும் அண்ணார்ந்து குடிக்காம‌ல் வாயில் வைத்து உமிழ் நீர் க‌ல‌ப்பை ஏற்ப‌டுத்தி பின் விழுங்குக‌ள்.

ஒரு நாளைக்கு 1லிட்ட‌ர் முத‌ல் 1.5 லிட்ட‌ர் வ‌ரை உமிழ் நீர் சுர‌க்கும். பிர‌யாண‌த்தின் போதும், ஓய்வின் போதும், தியான‌த்தின் போதும் உங்க‌ளின் உத‌டுக‌ள் பிரியாம‌ல் இருக்கும் ப‌டி பார்த்துக் கொள்ளுங்க‌ள். உத‌டுக‌ள் இர‌ண்டும் சேர்ந்திருந்தால் தான் உமிழ் பெருக்கு ஏற்ப‌டும். அந்த‌ உமிழ் நீரை விர‌ய‌ம் செய்யாம‌ல் விழுங்கி விடுங்கள்.

அதிக‌ ப‌சி ஏற்ப‌ட்டு சிறிது நேர‌த்தில் எவ்வித‌ பாதிப்பையும் ஏற்ப‌டுத்தாம‌ல் ப‌சி ம‌றையுமானால் உங்க‌ள் உட‌ல் செரியூட்ட‌ப் ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரையை சேமிக்க‌ தொட‌ங்கி விட்ட‌து என்ப‌தை உண‌ர‌லாம். இந்த‌ த‌ருண‌த்திலிருந்து உங்க‌ள் உட‌லின் நோய் எதிர்க்கும் ச‌க்தி மேம்ப‌ட‌ தொட‌ங்கிவிடும். இந்த‌ கால‌ங்க‌ளிலிருந்து நீங்க‌ள் அன்றாட‌ம் உட் கொண்டு வ‌ரும் மாத்திரை ம‌ருந்துக‌ளை குறைத்துக் கொள்ளூம் ப‌டி உங்க‌ள் உட‌லே உங்க‌ளை வ‌ழியுறுத்தும். உதார‌ண‌த்திற்கு நீர‌ழிவு நோயாளி இனிப்பு சாப்பிட்டாலும் சுக‌ர் முன்பை போல் ஏறாது. ம‌ருந்துக‌ளை ஒரே நாளில் நிருத்தி விடாம‌ல் ப‌டிப்ப‌டியாக‌ குறைத்துக் கொள்ளுங்க‌ள்.