ambedkhar 450இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனியத்தை ஆட்டம் கான வைத்த தலைவர்கள் மிகச் சிலரே. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் கெளதம புத்தர், தோழர் அம்பேத்கர், தோழர் பெரியார் ஆகியோர் ஆவார்கள். இவர்களில் பார்ப்பனியத்தை அழித்துப் பெரு வெற்றி கண்புத்தரை அரவணைத்து அழித்துவிட்டார்கள்.

புத்தரின் நல்ல கருத்துக்களையெல்லாம் திருடி, தங்களுடையதாக மாற்றி விட்டார்கள். தோழர் அம்பேத்கரையும் தோழர் பெரியாரையும் அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதனுடைய வெளிப்பாஎேழுத்தாளர் ஜெயமோகனின் அம்பேத்கருக்கு எதிரான அவதூறு கட்டுரைகளை இந்துத்துவ ஆதரவு இதழான ‘தமிழினி’ இதழில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பார்ப்பன எழுத்தாளர் அருண்சோரி எழுதிய தோழர் அம்பேத்கர் பற்றிய நூலுக்கு திராவிடர் கழகத் தலைவர் தோழர் வீரமணி அவர்கள் விரிவான மறுப்பை நூலாக வெளியிட்டார். ஜெயமோகனின் புளுகல்களுக்கு தோழர் பிரபாகரன் அவர்கள் “அம்பேத்கரும் அவதூறுகளும்” என்ற தலைப்பில் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பதிநான்கு தலைப்புகளில் கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்த நூலை காட்டாறு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

புளுகுவதையே தொழிலாகக் கொண்அதனை எழுத்துப்பணி எனச் சொல்லி, தங்கள் கருத்துக்கு எதிரானவர்களைப் பற்றி ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவதும் - அதற்கு மறுப்பு வந்தால் பதில் சொல்லாமல் இருப்பதும் ஜெயமோகனின் வழக்கமாகும்.

ஏற்கனவே தோழர் பெரியார் பற்றி அவருடைய இணையதளங்களில் தொடர்ந்து அவதூறாக எழுதிவந்தார். இதழியலாளர் சுகுணா திவாகர் அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். ‘தடம்’ இதழில் நிலச்சீர்திருத்தம் பற்றி அவர் கூறிய புரட்டுகளுக்கு ‘காட்டாறு’ இதழில் தோழர் அதி அசுரன் பதில் கொடுத்தார்.

இந்துத்துவவாதிகளின் புரட்டல்கள்

பார்ப்பனர்கள் தங்களுடைய சமூக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்ேேதாழர் அம்பேத்கரை இந்துத்துவ ஆதரவாளராகக் காட்முயற்சிப்பதாகும்.

“நண்தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்எனக்கு” என்பதுதான் பார்ப்பனப்புத்தி. தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தை எதிர்த்துப் போராடிய ஒரு தலைவரை, இந்து மதத்தின் அனைத்து புராண இதிகாசங்களை ஆய்வு செய்து அதன் ஜாதி வெறியை வெளிப்படுத்தி பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் இவற்றிற்கெல்லாம் மூலமான மனுதர்மம் என அனைத்தையும் கற்று அவை எப்படியெல்லாம் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்வைக்கிறது என ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்திய தலைவரை எப்படி இந்துத்துவ சிமிளுக்குள் அடைக்க முயற்சி செய்கின்றனர்.  தோழர் பிரபாகரன் அவர்கள் 59 ம் பக்கத்தில் அழகாக தோலுரிக்கிறார்.

“அம்பேத்கரின் பெளத்த மதமாற்றம் பற்றிய இந்துத்துவவாதிகளின் மற்றொரு பொய்ப் பிரச்சாரம் அவர் மதம் மாறிய அக்டோபர் 14 ம் நாள் தசரா அல்லது விஜயதசமி நாள். எனவேதான் அதைத் தெரிவு செய்தார் என்பது” இந்தப் பொய்க்கு நூலாசிரியர் அடுத்த வரியிலே சரியான விளக்கத்தைப் பதிவு செய்கிறார் “ பெளத்த மரபின் அடிப்படையில் அக்டோபர் 14 என்பது புத்தரின் 2500 வது பிறந்தநாளும், பெளத்த மன்னரான அசோகரின் மதமாற்ற நாளும் ஆகும்”.

புத்தரின் பிறந்தநாளையும், அதனாலே அந்த நாளில் மதம் மாறிய மாமன்னர் அசோகர் மதம் மாறிய நாளையும் தேர்ந்தெடுத்து மதம் மாறிய நிகழ்ச்சியைக் கூதங்களுக்கு சாதகமாக மாற்றும் பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும். தோழர் அம்பேத்கருக்கு மட்டுமல்ல, இந்து மதத்தில் உள்ள ஜாதிய வேறுபாடுகளுக்கு எதிராக சமத்துவத்தைப் பேசிய பல பேரைத் தனதாக்கிக் கொண்டது இந்துமதம்.

வைகுண்டசாமி, வள்ளலார், நாராயணகுரு ஆகியோரை இன்று தனக்கானவர்களாக மாற்றி அவர்களைப் பின்பற்றும் மக்களை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தி, பார்ப்பனிய வளர்ச்சிக்குப் பயன் படுத்துகிறது இந்துமதம். மேலும் சமண மதத்தை பின்பற்றக் கூடியவர்களை வளைத்துப் போட்இன்றைக்கு ஜெயின் சமூகம்தான் இந்துத்துவத்தைப் பரப்புவதில் முன்னிலையில் இருக்கிறது. இந்து மதத்தில் 365 நாட்களும் ஏதாவது பண்டிகைகளும், நிகழ்ச்சிகளும் இருந்துகொண்இேருக்கும். அதற்கு மாற்றான நமக்கான விழாக்களும் இருக்கும். பொய் சொல்வதிலும் திரித்து கூறுவதிலும் வல்லவர்களான பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியைப் பயன்படுத்தி வென்றுவிடப் பார்க்கிறார்கள்.

இதை எப்படி முறியடிப்பது? தோழர் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பெளத்தம் மாறிய நாளன்று வெளியிட்22 முழக்கங்கள் அனைத்தும் இந்து மதத்திற்கு வைக்கப்பட்வெடிகுண்டுகள் ஆகும். அந்த முழக்கங்களை நாம் மக்களிடம் கொண்செல்ல வேண்டும். தோழர் பெரியாரைப் பற்றி யாரிடம் கேட்டாலும் இந்து மதத்தின் எதிரி, பார்ப்பனர்களின் எதிரி எனப் பதிந்துள்ளதைப் போல் தோழர் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு கருத்துக்களையும், பார்ப்பன எதிர்ப்பு கருத்துக்களையும் மக்களிடம் கொண்சேர்க்க வேண்டும்.

தோழர் அம்பேத்கரை ஒரு சட்மேதையாக, பொருளாதார நிபுணராக மட்டும் காட்டாமல் ஆரியத்தை, அது கட்டமைத்த இந்து மதத்தை ஒழிக்க அவர் கூறிய கருத்துக்களையும் அவர் நடத்திய போராட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தோழர் அம்பேத்கரின் பல்வேறு சிறப்புகளை மக்களிடம் பேசும் இயக்கங்கள் அவரின் இந்து - பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை பேசுவதில்லை. இந்துக்கடவுள்களை வணங்கக் கூடாது என்றும் இந்துமத புராணங்களை, பண்டிகைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்த மாபெரும் தலைவனை இந்து மதவெறிக்குள் கொண்டுவரும் போக்கிற்கு எதிராக நாம் அனைவரும் மக்களிடையே இந்து மத, பார்ப்பன எதிர்ப்பு பற்றி அம்பேத்கர் பேசியதையும் எழுதியதையும் கொண்செல்லாவிட்டால் இந்த ஆபத்து தொடரும்.

அம்பேத்கர் பிரிட்டிஷ் ஆதரவாளரா?  

பார்ப்பனர்கள் தங்களின் சமூக அதிகாரத்தை ஆட்டம் காண வைத்த தலைவர்கள் மீதெல்லாம் வைக்கப்படும் குற்றச்சாட்தான் பிரிட்டிஷ் ஆதரவாளர் என்பதாகும். காலத்திற்கு தகுந்தாற்போல் குற்றச்சாட்டுகளை மாற்றியும் கொள்வார்கள். இன்றைக்கு பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை கிறித்துவ, இஸ்லாமிய மதங்களின் கைக்கூலி, பாகிஸ்தான் ஆதரவாளர் என பல குற்றச்சாட்வைப்பதைப் பார்க்கிறோம். பொதுவாகவே தேசியம் என்பது குறிபிட்சமூகம் மக்களைச் சுரண்டுவதற்கும், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கும் பயன்படும் வார்த்தையாகும். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தை தக்க வைக்க நடந்ததாகும்.

எனவே பிரிட்டிஷ் ஆதரவாளர் என்றோ, பாகிஸ்தான் ஆதரவாளர் என்றோ சொல்லிவிட்டால் வெகு மக்களின் கோபத்திற்கு ஆளாகி அன்னியப்பட்விடுவோமோ என்ற பயத்தில் நாம் மாறி விடுவோம் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் சமூக மாற்றத்திற்காக போராடிய பெரும் தலைவர்களான அம்பேத்கரும், பெரியாரும் ஒரு சேரவே இப்படிப்பட்ட விமர்சனங்களைச் சந்தித்தனர். அம்பேத்கர் அவர்கள் பிரிட்டிஷாரை பல இடங்களில் ஆதரித்தும் இருக்கிறார், எதிர்த்தும் இருக்கிறார். தங்களுடைய சமூக விடுதலைக்கு பிரிட்டிஷ் அரசிடம் தீர்வு இல்லாத போது அவர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களைத் தோழர் பிரபாகரன் அவர்கள் தக்க ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

இந்த புத்தகத்தின் 72ம் பக்கத்தில் அம்பேத்கரின் மேற்கோளை எடுத்துக்காட்டி ஜெயமோகனின் சூழ்ச்சியை முறியடிக்கிறார், “தீண்டாமை பிரிட்டிஷ்காரர்களால் தோற்றுவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அன்று ஆட்சி புரிந்த அரசு என்ற முறையில் தீண்டாமையை அகற்றுவது நிச்சயமாக அவர்களின் பொறுப்புதான்” எனக் கூறுகிறார். இதைவிடப் பல கடுமையான விமர்சனங்கள் கூபிரிட்டிஷ் அரசு மீது அம்பேத்கர் அவர் வைத்துள்ளதை இந்தக் கட்டுரையில் பல இடங்களில் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேய எதிர்ப்பாளராக அறியப்படும் காந்தி பல்வேறு நிலைகளில் பிரிட்டிஷ் ஆதரவு நிலை எடுத்ததையும் இந்த நூலில் விளக்குகிறார்.

இந்து மதத்தின் மிகக் கொடுமையான சட்டங்கள் புகுத்திய சமூக இழிவுகளையும், ஒடுக்குமுறை களையும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு, பார்ப்பன, சத்திரிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடக் கூடமுடியாமல் அடிமைப்பட்கிடந்த ஒரு சமூகத்தில் ஆங்கிலேய அரசு செய்த சமுக மாற்ற நடவடிக்கைகளால் சில நன்மைகள் நிகழும்போது அதை ஆதரிக்காமல் இருந்தால்தான் தவறு ஆகும்.

நூல் ஆசிரியர்: பா.பிரபாகரன்

நூல் கிடைக்குமிடம்: கருத்துப்பட்டறை, 2, முதல் தளம், நாகா வளாகம், திருநகர், மதுரை, செல்: 9842265884, விலை 100