இதழியல்வழி உருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்க வரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார்.

vindhanஇருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த அ.மாதவையா(1872-1925), வ.ரா. (18891951), புதுமைப்பித்தன் (1906-1948) ஆகியோர் கரடுதட்டிப்போன சமூகக் கொடுமைகளைத் தம் எழுத்துக்களில், தோலுரித்தவர்களில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவர்கள். சாதியக் கொடுமை, பெண்ணடிமை போன்றவற்றைத் தமது ஆக்கங்களில் பதிவு செய்தவர்கள். இந்த காலங்களில் சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் குறித்து தம் ஆக்கங்களில் பதிவு செய்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மூடநம்பிக்கைக்கு எதிரான பல படைப்பாளிகள் தமிழில் உருவாகிவிட்டனர். அவர்களில் தற் போது நூற் றாண் டு நிறைவெய்தியிருக்கும் கோவிந்தன் எனும் விந்தன் (1916-1975) குறிப்பிடத்தக்கவர். அவரது நூற்றாண்டுநிறைவையட்டி,மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது ஆக்கங்களை நினைவுபடுத்திக் கொள்வதாக இப்பதிவு அமைகிறது.

விந்தனின் தனித் தன்மைகளாகப் பலவற்றைப் பதிவு செய்ய முடியும். அவரது ஆக்கங்களில் அவை எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதைச் சுருக்கமாகக் கீழ்க்காணும் முறையில் தொகுக்கலாம்.

-1930களில்தான் தமிழ்ச் சிறுகதை வடிவம் என்பது தமிழில் நிலைபேறு கொண்ட காலம். இக்காலங்களில் புதுமைப்பித்தன் முன்னத்தி ஏர். ஆனால் விந்தன், தமிழ்ச்சிறுகதை மரபில் உதிரிப்பாட்டாளி மக்களைப் பதிவு செய்த முதல் மனிதர் என்று கூறமுடியும். சென்னை நகர உருவாக்கமும் அத்தன்மை சார்ந்து உருவான பாட்டாளிகளைக் கதை மாந்தர்களாக விந்தன் உருவாக்கினார். இந்த வகையில் ஜெய காந்தனுக்கு முன்னோடியாக விந்தனைக் கூற முடியும்.

-இதழியல்வழிஉருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்கவரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார்.

-விந்தன் நாவல்களும் இதழியல் சார்ந்த தொடர்கதை மரபில் உருவானவைதான். அவற்றில் பெண் குறித்த பதிவுகளே முதன்மையாக அமைகின்றன. இந்த வகையில் இவருக்கு முன்னோடியாக வ.ரா. வைக் கூறலாம். பெண்களுக்குச் சமூகம் இழைக்கும் கொடுமைகளே இவரது நாவல்கள்.

1960 களில் ‘தினமணிக்கதிர்’ போன்ற பத்திரிக்கைகளில் உருவகக் கதைகளை விந்தன் எழுதினார். “ஓ மனிதா!” என்று அவை தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கையில் உள்ளபிற உயிரினங்களைவிட மனிதன் எவ்வாறு மோச மானவனாக இருக்கிறான் என்பதை உருவகம் செய்துஎழுதியுள்ளார். மனிதசமூகம் நிகழ்த்தும் கொடுமைகள் மீதான கடும் விமர்சனமாக (ளுயவசைந) அவை அமைந்துள்ளன.

1950களில் இஸ்மத்பாஷா நடத்திய ‘சமரன்’ இதழும் விந்தன் நடத்திய ‘மனிதன்’ இதழும் குறிப்பிடத்தக்கவை. கம்யூனிஸ்ட்க் கட்சியிலிருந்து வெளியேறி இஸ்மத்பாஷா நடத்தியது சமரன், கம்யூனிஸ்ட் கட்சி தொடர் பில்லாமல் விந்தன் நடத்தியது மனிதன்.இவ்விரு இதழ்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து நடத்திய இதழ்கள் அளவிற்கு இடதுசாரி சிந்தனை மரபை முன்னெடுத்தவை. குறிப்பாக, தி.மு.க. வின் வெகுசன அரசியலைக் கடுமையாக விமர்சனம் செய்தவை. மாக்சிம் கார்க்கியின் தாக்கத்தால் தமது பத்திரிக்கைக்கு ‘மனிதன்’ என்று பெயரிட்டதாக விந்தன் கூறுகிறார். இந்த வகையில் இதழியல் துறையிலும் விந்தன் தனித்தன்மையுடன் செயல்பட்டிருக்கிறார்.

‘அன்பு’ என்ற திரைப்படத்தில் விந்தன் எழுதியபாட்டு இவ்வாறுஅமைகிறது. “விதியை நம்பி எத்தனை நாள் வீணாக்கழிப்பது?ஃ வீணர் வாழ எத்தனை நாள் வீரம்குன்றி வாழ்வது?ஃ பாடுபடும் பாட்டாளி பசியாலே துடிக்கிறான்ஃ பசியைப் பணமாக்கி முதலாளி பதுக்குகிறான்ஃ சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குதுஃ ஆலையிலே அவனாவி புகையாகப் போகுதுஃ” எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளிக்குப் பாடல் மற்றும் கதை வசனம் எழுதியவர் விந்தன். சினிமாத்துறையில் செயல்பட முயன்று தோல்வியடைந்தவர் விந்தன்.

மேற்குறித்தவாறு பல்துறைப் புலமையாளராக வாழ்ந்த விந்தன் 1940-1970 காலங்களில் தமிழ்ச் சூழலின் தனித்த ஆளுமையாகவே இருந்தார். இவரது ஆக்கங்களில் இரண்டை மிக முக்கியமானவையாகநான்கருதுகிறேன்.அவை பின்வருமாறு.

-1973 இல் அவர் எழுதிய “பெரியார் அறிவுச் சுவடி” எனும் சிறு நூல். அவரது மறைவுக்குப் பின்புதான் அச்சுவடிவம் பெற்றது.

அவரது கையெழுத்து வடிவில் 1978 இல் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

1956இல் விந்தன் எழுதிய‘பசிகோவிந்தம்’ எனும் நூல்.

இவ்விரு ஆக்கங்கள் தொடர்பான விரிவான உரையாடலை முன்னெடுப்பது அவசியம். அவரது நூற்றாண்டு விழா தொடர்பாக நடந்த பல கருத்தரங்குகளில் அவரது புனைகதை உலகம், இதழியல் உலகம், சினிமா உலகம் ஆகியவை பற்றி விரிவாகப் பேசப்பட்டது. ஆனால், பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்க மரபு சார்ந்து அவர் எழுதிய மேலே குறித்த இரு ஆக்கங்கள் பற்றிய உரையாடல்கள் விரிவாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூற முடியாது. சுயமரியாதை இயக்க மரபு மற்றும் இடதுசாரிகருத்துநிலைசார்ந்தவர்கள்பெரிதும் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டிய இவ்விரு ஆக்கங்கள் தொடர்பான உரையாடலை முன்னெடுப்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் முப்பதாம் நாள் விந்தன் மாரடைப்பால் முடிவெய்தினார். தந்தை பெரியார் டிசம்பர் 24 ஆம் நாள் 1973 இல் முடிவெய்தினார். விந்தன் ‘பெரியார் அறிவுச்சுவடி’ எனும் குறுநூலை 1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதி முடித்திருக்கிறார். பெரியார்மறைவதற்குசுமார்ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது இப்பிரதி. அப்பிரதியில் காணப்படும் சில வரிகளை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.

‘ஆத்திசூடி’ எனும் இலக்கிய வடிவம் ஆத்திமலரைச் சூடி, சிவனை வழிபடுவது என்னும் மரபில் தமிழில் உருவானது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் சைவ கருத்தியல் பரப்புரை வடிவில் உருவாக்கப்பட்ட கிழவி உருவக மரபுதான் ஓளவைப்பாட்டி. சங்க கால ஓளவைக்கும் இந்தக் கிழவி உருவக ஓளவைக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தமிழ் இலக்கிய மரபில் சுமார் ஐந்து ஓளவைகள் காலந்தோறும் கட்டமைக்கப்பட்டுள்ளனர். இதில் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் கட்டப்பட்ட ஓளவை உருவம் தான் ‘ஆத்திசூடி, உலகநீதி, ஆகிய நூல்களை உருவாக்கியதாக மரபு. இவை அப்பட்டமான பெண்ணடிமை பேசும் சமய நூல்கள். சைவம் சார்ந்த நூல்கள். இவ்வகை ஆத்திசூடிமரபில் எழுதுவது என்பது தமிழ்ப் புலவர்கள் மரபுகளில் ஒன்று. தமிழில் அவ்வகையில் சுமார் 50 ஆத்திசூடிகள் தேறும்’. இவை குழந்தைகளுக்கு அகர வரிசைகளைப் பாடம் சொல்வதற்காக எழுதப்பட்டவை. திண்ணைப்பள்ளி பாடநூல்களில் ஆத்திசூடி முதன்மையானது. மேற்குறித்த ‘ஆத்திசூடி’, ‘உலகநீதி’, வடிவில் விந்தன் எழுதிய சுயமரியாதைக் கருத்துப் பரப்புரை வரிகள் முக்கியமானவை. அவை

“ஆலயம் தொழுவது சாலவும் தீது” இவ்வரிகள் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ எனும் மூல ஆத்திசூடியை மறுதலித்தது. இவ்வகையில் பின்வரும் பலவற்றையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

‘ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே’

‘கடவுள் என்பது கயவர்கள் கற்பனை’

‘கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்’

‘கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை’

‘கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு’

‘சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை’

‘செத்ததும்விடுவான்மருத்துவன்;செத்தாலும் விடான் புரோகிதன்’

‘திராவிடர்க்கில்லை திதியும் திவசமும்’

‘தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே’

‘நெற்றியில் வேண்டாம் நீறும் நாமமும்’

‘பாம்புக்கு நஞ்சு பல்லில்; பார்ப்பனுக்கு நஞ்சு நெஞ்சில்

‘பீடை என்பது பிராமணீயமே’

 ‘மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை’

விந்தன் எழுதியுள்ள 85 அறிவுச்சுவடி பாடல்களில் மேலே சிலவற்றை மட்டும் மாதிரியாகக் கொடுத்துள்ளேன். அந்த வடிவத்திற்கு ‘பெரியார் அறிவுச்சுவடி’ என்று அவர் பெயர் கொடுத்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். பெரியாரின் இறுதிக் காலத்தில், விந்தன் தமது இறுதிக் காலத்தில் செய்த பதிவு என்பது, வாழ்நாள் முழுதும்பெரியார்குறித்துவிந்தன்கொண்டிருந்த மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார் பேசிய கருத்துக்களின் சாரமாக அமையும் இவரது இந்த நூல், சிறு வடிவில், சட்டைப் பையில் வைத்திருக்கும் அளவில் அச்சிட்டுப் பரப்பும் தேவை நமக்குண்டு. பெரியார் சிந்தனைகளை இவ்வகையான வடிவத்தில் எழுதியவர்களாக இன்னொருவரைக் கூற முடியுமா? என்பது அய்யமே. விந்தன் ‘கல்கி’, ‘தினமணிக்கதிர்’, ‘அமுதசுரபி’ ஆகியபிற பார்ப்பனப் பத்திரிக்கைகளில் வேலை பார்த்தவர் என்றாலும் பெரியார் குறித்த இவ்வகையான மனப்பதிவு,1930-1975 காலங்களில் தமிழ்ச்சூழல் நிகழ்வுகளை அறிந்தவராக அவர் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அச்சூழலில் பெரியாரை மட்டுமே அவர் மதித்து உள்வாங்கியதையும் அறிகிறோம். விந்தன் திராவிடக் கழகச் செயல்பாடுகள் எதிலும் பங்குகொண்டவர்இல்லைஎன்பதையும்இங்கு பதிவு செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் எதார்த்த நிகழ்வுகளை உள்வாங்கிய எழுத்தாளன் பெரியார் பக்கம்தான்நிற்க வேண்டும் என்னும் உந்துதல் உருவாகியிருப்பதை அறியமுடிகிறது.

vindhan book‘ஆத்திசூடி’ வடிவம் அகர வரிசையில் அமைவது. ‘உலகநீதி’, ஆகிய பிற நூல்கள் ஒலி வடிவில் அமைவன. பக்திப்பாடல்களில் உள்ள பஜனைமரபு போன்றுஒலிஏற்ற இறக்கத்தோடு பாடுபவைஉலகநீதிபோன்றநூல்கள்.இம்மரபை உள்வாங்கி ‘சமூகநீதி’ எனும் தலைப்பில் விந்தன் எழுதியுள்ள பாடல்கள், பெரியாரின் கருத்து மரபை எளிய சொற்களால் வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. இவ்வடிவத்தில் விந்தன் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1.“சாதியென்றும் சமயமென்றும் சொல்ல வேண்டாம்.

சாத்திரத்தை ஒரு நாளும் நம்ப வேண்டாம்.

விதியென்றும் வினையென்றும் சொல்ல வேண்டாம்.

வீணாகக் காலத்தைக் கழிக்க வேண்டாம்.

நாளென்றும் கோளென்றும் சொல்லவேண்டாம்.

நல்வாய்ப்பை அதனாலே இழக்க வேண்டாம்.

தமிழினத்தின் தன்மானம் காக்க வந்தோன்

தலைவனாம் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே”

2. “மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்

மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம் சிந்திக் கும் முன் எதையும் செய்ய வேண்டாம்

செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்

பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்                                            

படித்துவிட்டுப் பகுத்தறிவை இழக்க வேண்டாம்                                        

‘எம்மதமும் சம்மதமே’ என்ற மேலோன் ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே” உலகநீதி நூலில் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று தொடங்கி ‘மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே’என்று முடியும் அந்த மரபையும் ஒலி ஒழுங்கையும் நேர்த்தியாக உள்வாங்கி, மேல் குறித்த ‘சமூகநீதி’யை விந்தன் எழுதியுள்ளார். ஆத்திசூடி மரபை உள்வாங்கியதைப் போல ‘உலகநீதியையும் உள்வாங்கி முறையே ‘அறிவுச்சுவடி’, ‘சமூகநீதி’ ஆகியபாடல்களை விந்தன் உருவாக்கியுள்ளார். இப்பாடல்களைக் குழந்தைகளிடத்தில் பரவச் செய்யும் கடமை நமக்கிருக்கிறது. விந்தன் தமது இறுதிக் காலத்தில் ‘பெரியார் அறிவுச் சுவடி’, ‘சமூகநீதி’ ஆகிய ஆக்கங்களை உருவாக்கியதற்கு ஏதேனும் அவரது முற் காலப் படைப்புகளில் ஏதுக்கள் உண்டா? என்று தேடினால் 1956 இல் அவர் எழுதிய ‘பசி கோவிந்தம்’ கிடைக்கிறது. இந்த நூல், தமிழ் இலக்கண மரபில் புடைநூலாகும். புடைநூல் என்பது இதற்குமுன்பு எழுதிய நூல் ஒன்றின் வடிவிலேயே, அந்நூல் கருத்தை ஏற்றோ மறுத்தோ எழுதும் நூல் என்று புரிந்துகொள்ளலாம். சங்கராச்சாரி ‘மோகமுத்கரம்’ எனும் நூலொன்றை எழுதியுள்ளார்; மோகத்தை உடைக்கும் சம்மட்டி என்று அதற்குப் பொருள். இந்த நூலைத் தழுவி ‘பஜகோவிந்தம்’ எனும் பெயரில் சமஸ்கிருதத்தில் பலர் எழுதியுள்ளனர்.  

தமிழில் இந்நூலைத் தழுவி ‘பஜகோவிந்தம்’ என்னும் நூலை இராஜகோபாலாச்சாரி எழுதி யுள்ளார். இந்த நூலுக்குப் புடைநூலாகவே விந்தன் ‘பசிகோவிந்தம்’ என்னும் நூலை உருவாக்கியுள்ளார்.

“அறிவு நன்றாக முற்றி இதயத்தில் பதிந்தால் அது ஞானமாகும். அந்த ஞானமானது வாழ்க்கையுடன் கலந்து ஒன்றாகச் சென்று செயலுருவமடைந்தால் அதுவே பக்தியாகும். முற்றிய அறிவு பக்தி என்று சொல்லப்படும்”, என்பது இராஜகோபாலாச்சாரியார் பதிவு. இதனையே விந்தன் தமது நூலில் “பசிவேறுபக்தி வேறு என்று பக்குமடையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்தவரை லாபம் என்று கருதுவோர்க்கப்படிப்பட்ட சொற்றொடர்களை ஆங்காங்கே பிரயோகப் படுத்துகிறார்கள். அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும். தவறான பொருளை எடுத்துக் கொண்டு ‘தகிங்கிணதோம்’ போடக் கூடாது. பசியும் பக்தியும் ஒன்றே. இரண்டல்ல. பசி முத்தினால் பக்திக்கு அவசியமில்லை; புலன்கள் அனைத்தும் ஏன் கடைசி மூச்சு உட்பட தாமாகவே அடங்கிவிடும். ‘தத்துவம்;’ இதுவே!”

இராஜாஜி கூறும் பக்தியை விந்தன் பசியாகக் கட்டமைக்கிறார். பசி உள்ளவர்களிடம் பக்தி பேசுவது அப்பட்டமான மோசடி என்பது விந்தன் கருத்து. இந்த வகையில் சங்கராச்சாரியார், இராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் பேசும் பக்தி மரபை எளிய சொற்களால் மறுத்து, அவை மக்களை ஏமாற்றும் தந்திரம் என்பதை ‘பசிகோவிந்தம்’ நூலில் வெளிப்படுத்துகிறார்.

பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே’ என்னும் வரிகளை விந்தன்

பசிகோவிந்தம் பசிகோவிந்தம்

பசிகோவிந்தம் பாடு

பரலோகத்தில் இடம் தேடலாம்

பசிகோவிந்தம் பாடு!

படிக்காதிரு படிக்காதிரு

படிக்காதிரு பயலே!

படித்தால் எமன் வரும்போதுனைப்

பகவான் கைவிடுவார்’

என்று விந்தன் கட்டமைக்கிறார். ‘பஜ கோவிந்தம்’ நூல் முதன்மையாக நிலையாமை குறித்துப் பேசுகிறது. இதனால் ஆசை, மோகம் ஆகிய பிறவற்றை மனிதன் கொள்வது குறித்தும் பேசுகிறது. விந்தன் இவ்வகையான சொல் லாடல்கள் என்பவை பாமர மக்களை ஏமாற்று வதற்காக உருவாக்கப்பட்டவை என்று உறுதியாக நம்புகிறார்.

‘பணமேனடா பணமேனடா

பணமேனடா பயலே?

பணத்தாசை வளர்த்தாலது

பணக்காரர் மேல் பாயும்

படுவாய்தினம் படுவாய்தினம்

படுவாய், பாடுபடுவாய்!

பசித்தாலது பகவான் செயல்

பஜகோவிந்தம் பாடு’

என்று விந்தன் எழுதுகிறார். இராஜாஜி எழுதியுள்ள முப்பத்தோறு பாடல்களுக்கு இணையாக இவரும் முப்பத்தோறு பாடல்களை எழுதியுள்ளார். இராஜாஜி திருக்குறள் வரிகளைப் பயன்படுத்தி விளக்கம் எழுதுவதை மறுத்து விந்தன் விளக்கம் எழுதுகிறார். இவ்வகையில் சமய மரபை மறுதலித்து பகுத்தறிவு மரபை முன்னெடுக்கும் நூலாகப் பசிகோவிந்தம் அமைகிறது.

1956 ஆம் ஆண்டுகளில் விந்தன் எழுதிய ‘பசி கோவிந்தம்’ நூலுக்கு மூலநூலான இராஜாஜியின் நூல் பஜகோவிந்தம், அதே காலச் சூழலில் எழுதப்பட்டது. குலக்கல்விதிட்டத்தை நடைமுறைப்படுத்த சட்ட வரைவுகளை இராஜாஜி இந்தக் காலச் சூழலில் தான் கொண்டுவந்தார். மிகவும் பிற்போக்கான சநாதனியாகச் செயல்பட்ட இராஜாஜியை நேருக்குநேர்மோதியவராகவிந்தன்அமைகிறார். பெரும் அரசியல் செல்வாக்குடைய, இந்திய அளவில் பெரும் தலைவராகவும் இருந்த நபரை சாதாரண எழுத்தாளராக இருந்த விந்தன் எதிர்கொண்ட முறைமை வியப்பளிக்கும் தன்மை கொண்டது. இவ்வகையான மனஉறுதியை சுயமரியாதை இயக்கம் அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்த நூல் அச்சாக்கம், எழுதப்பட்டுள்ள மொழி ஆகிய அனைத்தும் இராஜாஜியை கடுமையாகப் பகடிசெய்யும் வகையில் உள்ளன. விந்தனின் இச்செயல்பாட்டை தமிழ்ச்சமூகம் அறிந்திருப்பதாகவே அறிய முடியவில்லை. அன்றைய சூழலில் தி.மு.க. அமைப்பை விமர்சனம் செய்பவராகவும் விந்தன் இருந்தார்.

இராஜாஜியையும் தி.மு.க. அமைப் பையும் ஒரே நேரத்தில் விமரிசனம் செய்யும் அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் நடைமுறைச் செயல்பாடுகள் சார்ந்து விந்தன் மேற்கொண்ட அணுகுமுறையை நாம் விதந்து பேச வேண்டும். இவ்விதம் 1950 கள் தொடங்கி, அவரது இறுதிக் காலம் முடிய சுயமரியாதைச் சிந்தனை மரபை உள் வாங்கி வாழ்ந்த மனிதராகவே விந்தன் வாழ்ந்திருக்கிறார். சிறுகதைப் படைப் பாளராகத் தொடக்ககாலத்தில் தம் எழுத்துப்பணியைத் தொடங்கியவர், பிற்காலங்களில் தமிழ்ச் சமூகத்தின் இயங்குதளத்தில் பெரியாரைப் புரிந்து கொண்டவராகவே வாழ்ந்திருக்கிறார்.

சுயமரியாதை இயக்கங்களில் நேரடி பங்கு பெறாமல், அதே நேரத்தில் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகள் மற்றும் தந்தை பெரியார் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரும் மதிப்புடையவர்களாக வாழ்ந்த வ.ரா. என்னும் வ.ராமசாமி மற்றும் கோவிந்தன் எனும் விந்தன் ஆகியோரை இன்றைய சுயமரியாதை இயக்கம் கொண்டாடும் தேவையுண்டு.