ஏன்
வீடு திரும்ப வேண்டும்?
ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன?
ஏன்
அம்மா வேலைக்குப் போவதில்லை?
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் இத்தனை வாகனங்களில்?
வளர்ந்த பின் தான்
வேலைக்குப் போகணுமா?
சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?
குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)