உறவு முறிந்ததும்
சருகாகிப்போன
இலை....
அந்தரத்தில் அகதியாய்
தரை நோக்கி
புதை நிலம் தேடி......
தொட்ட மண்
சுட்டதேன்..?
தரையெங்கும் தார்பூச்சு...
அழுக்கு அண்டம்,
கலவைக் காற்று, கைக்கெட்டிய நிலத்தையும்
உடல் ஒட்டவிடாமல் தடுத்த
கண்ணாடிக்காகிதம்...
இயற்கைச்சக்கரம்
சதுரமாய்....