பேச்சு சூதேறியிருக்கிறது
நாவில்
வெப்பதிற்கான
எரிபொருள் புரண்டபடி
அணையா கர்வத்தின் நெடி
அந்த நேரத்திற்கான
பெருமூச்சுகளில்
மாசாகக் கலந்துள்ளது
அசைவுறாத
கருவிழிகளில் தெரிகிறது
உடைக்கப்படாத
படிமப்பிழைகளின் உருவங்கள்
அக்கொடிய வெப்பம்
தணியும்படிக்கு
மௌனத்தின் அகோர ஆழங்களுக்கு
பயணிக்க வேண்டிக்கொள்கிறது மனம்
அங்கு
சென்றடையும் தருணத்தில்
கர்வமிழந்தவர்கள் சிலர்
அழுதுகொண்டிருப்பார்கள்..
- கலாசுரன்