ஆங்கிலத்தைப்படிப்பதால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?
இது பெரியாரின் கேள்வி. பெரியார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று - அவர் ஆங்கிலத்திற்கு அதிகம் இடம் அளித்தார். தமிழை விட்டு விட்டு ஆங்கிலத்தைப் படியுங்கள் அதிலேயே பேசுங்கள் என்று கூறினார் என்பதாகும். இதிலும் பெரியார் தன்னுடைய காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழனின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே கூறினார்.
ஆங்கிலத்தை கற்று தமிழன் நல்ல தொழிலுக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; அதுவே அவனுடைய இழிவினைப் போக்கும் வலிமை படைத்து என்று கருதினார். அவருக்கு தமிழன் வாழ்க்கை தான் முக்கியம். தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் வாழமுடியும் என்று கருதியவர் பெரியார். மொழியை விடவும் மனிதன் முதன்மையானவன் என்பது மனித நேயம் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தே ஆகும். அரசியலுக்காக அதை அப்படியே திருப்பிப்போட்டு தமிழ் இருந்தால்தான், வாழ்ந்தால்தான் தமிழன் வாழமுடியும் என்று எழுதுகிற, கருதுகிற கூட்டத்தில் இன்று பல முற்போக்குவாதிகளூம் கரைந்து விட்டது மிக்க வருத்தம் அளிக்கிறது. ஈழத்தில் இன்று தமிழனே இல்லை. தமிழ் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கைக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் எழுதுவதற்கு மட்டும் தமிழை பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒருங்குறியில் UNICODE மட்டும் தான். ஆங்கிலம் அறியாமல் இருந்தால் ஒருங்குறியில் UNICODE பயன்படுத்த இயலுமா?
இன்றைக்கும் அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்த மொழி ஆங்கிலமே என்பதில் ஐயமில்லை. கால்செண்டர் முதல் மென்பொருள் தொழில் வரை அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாதம் மூவாயிரம், நாலாயிரம், ஐந்தாயிரம் வரை பொருள் ஈட்டுவதற்கு உதவுவது ஆங்கிலமே. அதற்கு சாளரம் அமைக்காமல் பாதை திறக்காமல் லத்தின், ஹீபுரூ, சீனம்,மலாய், செர்மன், ஜப்பான் போன்ற மொழிகளுக்கா சாளரம் அமைப்பார்கள்? இதில் திராவிட இயக்கம் செய்த தவறு என்ன? பெரியார் செய்த தவறு தான் என்ன? தமிழ்த் தேசியர்கள் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியர்கள் என்றெல்லாம் மார்த்தட்டிக்கொண்டு திரியும் கூட்டம் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்கிறது.? மார்க்சையும், லெனினையும் தமிழ் படித்தால் போதாது மொழி பெயர்ப்பில் குளறுபடி செய்து கருத்தை திருத்தியிருப்பார்கள். எனவே ஆங்கிலத்தில் அந்த நூல்களை படிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே! அது எப்படி? ஆங்கிலத்திற்கு வழியே வைக்காவிட்டால் அந்த நூல்களை படிப்பது எவ்விதம்?. மார்க்சும் மூலதனம் நூல் முழுவதையும் ஒரு தமிழ் தேசியர் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். ஆங்கில அறிவு இல்லாமல் அவரால் எப்படி இதை செய்ய முடியும்?.
இதைவிட வேடிக்கை இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் மார்க்சின் தாய் மொழியான ஜெர்மனி மொழியில் தான் அவருடைய நூல்கள் எழுதப்பட்டன. எனவே அந்த மொழியை கற்று அதன் பிறகு அந்த நூல்களை படிப்பது சாலச்சிறந்தது. சே குவராவின், காஸ்ட்ரோவின் எழுத்துக்களை எல்லாம் அவை எழுதப்பட்ட ஸ்பானிஸ் மொழியில் தான் படிக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஸ்பானிஸ் மொழி இந்தியாவில் எங்கு பயிற்றுவிக்கப்படுகிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே தாங்கள் ஒரு சிறப்பான செயலை செய்ய வேண்டும், புதியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை ஏற்படும்போதெல்லாம் ஆங்கில மொழியை நாடுவதில் தமிழ்த் தேசியர்களும் பெரியார்வாதிகளும் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் இதையே மற்றவர்கள் செய்தால் மொழிப் பற்று இல்லாதவன் ஆங்கில அடிவருடி என்று இழித்தும் பழித்தும் உரைப்பார்கள். இது என்ன நீதி?
எல்லா தகவல்களும் தொழில் நுட்பமும் அறிவியல் செய்திகளும் தமிழுக்கு வந்து சேர்ந்த பிறகு மற்றவர்கள் படித்துக்கொள்ளட்டும். நாம் ஆங்கிலம் கற்று அவற்றை முதலில் தெரிந்து கொள்வோம் என்ற புதிய வகை பார்ப்பனியம் தானே இது. எல்லாம் தமிழுக்கு வரும் வரை மற்றவர்கள் கையை கட்டிக்கொண்டும் இருக்க வேண்டும். இவர்கள் சட்டாம்ப்பிள்ளையாக மாறி ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழியில் இருந்து எடுத்துக்கொடுப்பார்கள். அதை மற்றவர்கள் படிக்க வேண்டும்.! ஏன்? நானே ஆங்கிலம் கற்று அதை நேரடியாக கற்றுக்கொள்கிறேன். நடுவில் நீ என்ன தரகு வேலை செய்வதற்கு என்று கேட்டால் இனத் துரோகி, மொழித்துரோகி என்ற பட்டம் தான்!. இதைத்தான் பெரியார் உடைத்தார். சூத்திர தமிழன் முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம் கற்க வேண்டும். அதில் உள்ள அறிவியல் செய்திகளை மனதில் வாங்கிப் படி. அதில் வாழ்க்கைக்கு உரிய செய்திகள் பல அடங்கி உள்ளன என்று தமிழனுக்கு அறிவுரை கூறினார். இதில் என்ன பிழை? அதையும் அவர் வற்புறுத்தவில்லையே!. இது என்னுடைய கருத்து. சரியென்று பட்டால் ஏற்றுக்கொள். இல்லை என்றால் தள்ளிவிடு என்று தானே கூறினார். இதை விட எளிதாக சுதந்திரமாக ஒரு கருத்தை ஒரு மனிதர் எவ்விதம் சொல்ல இயலும்?
இந்த கருத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது. கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்பில் இருந்து எழுந்ததுதான். மற்றபடி இந்த கூச்சலுக்கும் தாய்மொழிப் பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அயல் மொழியை கற்றுக்கொள்வதனால் மட்டும் ஒருவன் தாய்மொழிப் பற்று அற்றவன் ஆகி விடுவானா? அப்படி என்றால் பன்மொழிப்புலவர் என்று பெயர் பெற்றுள்ள பல அறிஞர்களும் (எ.கா. பரிதிமாற்கலைஞர், கா. அப்பாதுரையார், மொழி ஞாயிறு, தேவநேயப் பாவாணர்) போன்றவர்கள் மொழிப்பற்று அற்றவர்களா? தனித்தமிழ் என்று முழங்கிய தேவநேயப் பாவாணர் B.O.L, M.O.L, என்ற பட்டங்களுக்கு உரிய தேர்வை எந்த மொழியில் எழுதினார்?
யாருக்கும் எளிதில் விளங்கா வண்ணம் எழுதுவதே சிறந்த தமிழ்த் தொண்டு என்ற கருத்தையே தன் வாழ்நாள் கொள்கையாக கடைபிடித்த மறைமலை அடிகள் என்ற வேதாசலனார் தம்முடைய எல்லா தமிழ் நூல்களுக்கும் ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுவதை ஒரு பெருமையாகக் கருதினாரே. அது ஏன்? "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்று கவி பாடிய சுப்ரமணிய பாரதி இந்து பத்திரிக்கைக்கு கடிதங்களையும், கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியது ஏன்? எனவே தனித்தமிழ் தூய தமிழர், செந்தமிழே இனியது என்று கூறிய பெருமகனார் யாரும் தமிழோடு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தையும் துணைக்கொண்டே தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வளப்படுத்தி இருக்கிறார்கள். அதை சில நேரங்களில் ஒளிவு மறைவாகவும் சில நேரங்களில் வெளிப்படையாகவும் செய்திருக்கின்றனர். ஆனால் பெரியார் இதை வெளிப்படையாக சொன்னார்; உரக்கச்சொன்னார். அப்படி சொன்னதற்காக பெரியார் மீது செருப்பைத் தூக்கி வீசியவர்களும், சேறுவாரி பூசியவர்களும் அவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதுமை இல்லையே.
தமிழனுக்கு தேவையானது என்று தான் கருதியதைத்தான் அவர் சொன்னார். அந்த ஒன்றையே பிடித்து தொங்கிக் கொண்டு பெரியார் தமிழன் இல்லை. தமிழ் பற்று கொண்டவன் இல்லை என்று கிளிப்பிள்ளை பாடம் சொல்வது போல் திரும்பத்திரும்ப சொல்வது; அதையே ஒரு காரணமாகச் சொல்லி பெரியார் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் அதைவிட சிறப்பாக தமிழனுக்கும் செய்த தொண்டுகளை மறைப்பது இந்த நோக்கிலே தமிழ்த் தேசியர்கள் செயல்படுவதும் பெரியாரை முதுகில் குத்துவதும், அதை பெரியார் பெயர் சொல்லியே கட்சியை நடத்தும் பெரியார்வாதிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும்!!! பெரியார் அவர்கள் தமிழ் தமிழ் என்று கூறுகின்ற தமிழ்ப்புலவர்களைப் பற்றி மிகச்சரியாக கணித்து வைத்திருக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்கு என்று தமிழைப் படித்து புலவர் பட்டம் பெற்று (தற்போது முனைவர், முது முனைவர்) பெற்றிருக்கும் ஒரே காரணத்தினால் தங்களுக்கு உலகம் முழுவதுமே தெரியும் என்று வெற்று கூச்சலிடும் கிணற்று தவளைகளைப் பார்த்து பெரியார் கைக்கொட்டி சிரிக்கிறார்.
அவர் புலவர் என்று சொல்லுகின்றபோது சங்ககாலப் புலவன் முதல் இந்த காலப் புலவன் வரை எல்லோரையும் உள்ளடக்கியதுதான். சங்கப்பாடல்களில் பெரும்பான்மையானவற்றில் என்ன கருத்து இருக்கிறது? நாலு வரி தமிழில் பாடி அதில் இரண்டு வரி அரசனைப் புகழ்ந்து மீதமுள்ள இரண்டு வரியில் தன்னுடைய ஏழ்மை நிலைமையை எடுத்துச்சொல்லி எனக்கு காசு கொடு, சோறு போடு என்று கேட்டவை தானே!! பெரும்பாணாற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும் நமக்கு கூறுகின்ற செய்தி இதுதானே.! ஒரு அரசனிடமிருந்து பொருளை இரந்து பெற்றுச்செல்லும் புலவன் எதிரில் வருகின்ற மற்றொரு புலவனைப் பார்த்து "நீ இந்த அரசனிடம் செல். அங்கு உனக்கு பொருள் கிடைக்கும் பசிப்பிணி மருத்துவன் இந்த இடத்தில் உள்ளான். அவனிடம் சென்றால் சோறு கிடைக்கும் என்று சோற்றுக்கு வழிகாட்டிய இலக்கியங்கள் தானே அவை. அவற்றைப் படிக்கும் ஒரு இளைஞனுக்கு என்ன பெரிய பொது அறிவு கிடைத்துவிடும். அதே போல் தானும் இரந்துண்டு வாழலாமே என்ற வழிமுறைதானே மனதில் உறைக்கும். இத்தகைய இலக்கியங்கள் மிகுதியாக இருக்கும் தமிழ்மொழி இலக்கியத்தை பெரியார் போன்ற தன்மானம் உள்ளவர்கள் சாடியதில் என்ன தவறு?
மனிதனை வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய இலக்கியங்கள் தமிழ் மொழியில் இல்லை. திருக்குறள் ஒன்றைத்தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை. எனவே திருக்குறளை மட்டும் படித்தால் போதுமானது என்று பெரியார் சொன்னதும் அவை பரப்புவதற்காக பெரியார் செய்ததும் பகுத்தறிவு உள்ள எந்த மனிதனும் ஒத்துக்கொள்ளாக்கூடிய செய்திகள் தானே. மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழியை விட்டு விட்டு தோன்றி நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியைப் போய் ஆதரிக்கிறீர்களே நீயெல்லாம் தமிழனா என்று பெரியாரை நோக்கி எள்ளி நகையாடினர். பெரியார் திருப்பிக்கேட்டார். நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியை வைத்துக்கொண்டு அவன் உலகம் முழுவதும் ஆண்டான். அறிவியல் புதுமைகள் பல செய்தான். மூவாயிரம் ஆண்டுகள் ஆன தமிழ் மொழியை வைத்துக்கொண்டு நீ என்ன செய்தாய்? பெரியாரின் இந்தக்கேள்வி உண்மையானது தானே! இதற்கு யாராவது பதில் கூற முடியுமா?
மாளிகையில் குடியிருப்போருக்கும் அரண்மனையில் வசிக்கும் மேட்டுக்குடியினருக்கும் ஒரு வீட்டிற்கு பல சாளரம் பல ஜன்னல்கள் பல காலதர் வைத்துக்கொள்ள இயலும். அவற்றை வேண்டும் போது திறக்கவும் அவற்றை தேவையில்லாவிட்டால் மூடிக்கொள்ளவும் இயலும். ஆனால் இப்பொழுது தான் நிமிர்ந்து நின்று குடிசை வீட்டிற்குள் புகுந்து வாழ ஆரம்பித்திருக்கும் ஏழைத்தமிழனுக்கு அது பொருந்தாது. அவனுடைய ஒரு அறை வீட்டிற்கு/ குடிசைக்கு ஒரு சாளரமே போதும். வாசலாக தாய்மொழியையும் சாளரமாக அறிவியல் மொழியாம் ஆங்கிலத்தையும் அவன் முதலில் கற்றுத்தெளியட்டும். அதன் பின்னர் மாடி வீடு கட்டி பல ஜன்னல்கள், சாளரங்கள் வைத்துக்கொள்ளட்டும். மாளிகைவாசிகள் பல சாளரங்கள் வைத்துக் அனுபவித்துக் கொள்வதை யாரும் தடுக்கவில்லையே.
- துரை இளமுருகு
//தனித்தமிழ் தூய தமிழர், செந்தமிழே இனியது என்று கூறிய பெருமகனார் யாரும் தமிழோடு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள வில்லை. ஆங்கிலத்தையும் துணைக்கொண்டே தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வளப்படுத்தி இருக்கிறார்கள். //
சிறப்பான கருத்து.
தமிழைக் கற்ற பின்னர் மற்ற மொழிகளை பேசுவதிலும் படிப்பதிலும் எந்த தவறும் இல்லை. எனக்கு ஆங்கிலம் தவிர எந்த மொழியும் தெரியாது என்று ஒரு தமிழன் சொல்வது இழிநிலை என்பது எனது கருத்து. நான் பெரியாரின் எண்ணங்களையும் கொள்கைகளையும் மதிக்கின்றேன். ஆங்கிலம் தேவை என்பது மறுக்கக்கூடாத உண்மை, தமிழும் கற்றறிய வேண்டும் என்பது தான் வேண்டுகோள்.
//ஆங்கிலத்தைப்ப டிப்பதால் என்ன கேடு வந்துவிடப் போகிறது? இது பெரியாரின் கேள்வி. // என்று கட்டுரையின் தொடக்கத்தில் கூறித் தம்மை ஒரு பெரியாரின் அணுக்கத் தொண்டராகக் காட்டிக்கொள்ள முனையும் துரை இளமுருகு அவர்களின் உண்மை முகம், இதே கட்டுரையில் //தேவை ஏற்படும்போதெல்ல ாம் ஆங்கில மொழியை நாடுவதில் தமிழ்த் தேசியர்களும் பெரியார்வாதிகளு ம் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் இதையே மற்றவர்கள் செய்தால் மொழிப் பற்று இல்லாதவன் ஆங்கில அடிவருடி என்று இழித்தும் பழித்தும் உரைப்பார்கள். இது என்ன நீதி?// என்று கேட்கின்ற இடத்தில்
வெளிப்படையாகத் தெரிகிறது. ஆங்கிலமே வேண்டாமென்று சொல்கின்ற பெரியார்வாதிகள் என்று துரை இளமுருகு யாரைச் சொல்கிறார்? அப்படி ஒருவரைக் கூட நம்மால் காட்ட முடியாது. பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பும் எந்த இயக்கம் இப்படிப்பட்ட கருத்தை முன்வைக்கிறது? ஓர் இயக்கம் கூட இக்கருத்தை முன்வைக்கவில்லை . அப்படியிருக்க, இக்கருத்து பெரியாரியவாதிகள ின் மீதும் தமிழ்த்தேசியவாத ிகள் மீதும் சேற்றை அள்ளி வீச ஆசைப்படும் இளமுருகின் உள்ளம் இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது அல்லவா? பெரியாரின் கருத்துகளில் ஆர்வமும் பற்றும் சிந்தனையும் கொண்டவர்கள், துரை இளமுருகின் கருத்தைக் கொண்டிருக்க முடியுமா? ஆக, துரை இளமுருகு பெரியாரைத் துணைக்கு அழைத்துக் கொள்வது தம்மை ஒரு முற்போக்கான ஆளாகக் காட்டிக் கொள்வதற்குத் தான் என்பது நமக்கு நன்றாக விளங்குகிறது.
இத்துடன் பெரியாரியம் பேசுகிறவர்களைப் பற்றி இளமுருகு நிறுத்தவில்லை. மேலும் தொடர்கிறார். // எல்லா தகவல்களும் தொழில் நுட்பமும் அறிவியல் செய்திகளும் தமிழுக்கு வந்து சேர்ந்த பிறகு மற்றவர்கள் படித்துக்கொள்ளட ்டும். நாம் ஆங்கிலம் கற்று அவற்றை முதலில் தெரிந்து கொள்வோம் என்ற புதிய வகை பார்ப்பனியம் தானே இது.// இப்படிப் பெரியாரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்பவர்களைப் பார்த்துப் புதிய வகை பார்ப்பனியம் என்று சொல்வதன் மூலம் தாம் கொண்டிருப்பது ‘எதையாவது ஒன்றைச் சொல்லிப் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவோரைச் சந்தி சிரிக்க வைக்கும் ஆர். எசு. எசு. அணுகுமுறையே’ என்பதையும் இளமுருகு நிறுவுகிறார்.
// சூத்திர தமிழன் முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம் கற்க வேண்டும். அதில் உள்ள அறிவியல் செய்திகளை மனதில் வாங்கிப் படி. அதில் வாழ்க்கைக்கு உரிய செய்திகள் பல அடங்கி உள்ளன என்று தமிழனுக்கு அறிவுரை கூறினார். இதில் என்ன பிழை? அதையும் அவர் வற்புறுத்தவில்ல ையே!. இது என்னுடைய கருத்து. சரியென்று பட்டால் ஏற்றுக்கொள். இல்லை என்றால் தள்ளிவிடு என்று தானே கூறினார்.// என்று சொல்கின்ற கட்டுரையாளர் துரை இளமுருகு, அடுத்துத் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களை ஒரு பிடி பிடிக்கிறார். எப்படியாம்? //“இந்த கருத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது. கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்ப ில் இருந்து எழுந்ததுதான்.// இதில் மூன்று வகை அணுகுமுறைகளை நாம் கையாளலாம்.
1. பெரியாரே ‘இது என்னுடைய கருத்து; சரியென்றால் ஏற்றுக்கொள். இல்லையென்றால் தள்ளிவிடு’ என்கிறார். ஆக, பெரியாரின் கருத்தை எதிர்க்கும் உரிமையை அவர் அளிக்கிறார். அப்படியானால் கருத்துக்கு எதிர்க்கருத்து என்னும் அளவில் தமிழ்த்தேசியவாத ிகள் (பெரியாரை எதிர்ப்பதாகக் கொண்டால்) செய்வது ஒன்றும் தவறில்லை. அதற்காக, // கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்ப ில் இருந்து எழுந்ததுதான்.// என்று அவர்களுடைய கருத்துக்கு எந்தவித அடிப்படையும் இன்றி உள்நோக்கம் கற்பிப்பது எப்படிச் சரியாகும்? அக்கருத்துக்கு எதிர்க் கருத்தாகப் பெரியார் சொன்ன கருத்தை அவர்களுக்கு விளக்குவதோ வேறு வகைகளில் விளக்குவதோ வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாமே தவிர இப்படி உள்நோக்கம் கற்பித்து நாறடிப்பதன் மூலம் இல்லை. ஆக, முதலில் பெரியாரிய வாதிகளைச் சாடிய துரை இளமுருகு, இப்போது தமிழ்த்தேசியவாத ிகளின் பக்கம் தம்முடைய சாட்டையை வீசியிருக்கிறார ்.
2. // அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது.// இப்படிச் சொல்கின்ற தமிழ்த்தேசியவாத ி என்று துரை இளமுருகு யாரைச் சொல்கிறார்? எந்த இயக்கம் இக்கருத்தை முன்வைக்கிறது? தமிழ்த்தேசிய வாதிகள் தமிழகம் முழுவதும் நடத்துகின்ற தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளிகள ில் ஆங்கிலம் ‘ஊடக மொழி’யாகத் திறம்படக் கற்பிக்கப்படுகி றது. அப்படியிருக்க, துரை இளமுருகு எழுதியிருக்கும் வரிகள் தமிழ்த்தேசியவாத ிகளைக் கொச்சைப்படுத்து ம் (//தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். //) வரிகளே அன்றி வேறென்ன?
3. ஒருவேளை தமிழ்த்தேசியம் பேசுகிற அனைவரும் பிராமணர்களாக இருந்தால், துரை இளமுருகின் கூற்றில் பொருள் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் தமிழ்த்தேசியம் பேசுகிற பெரும்பாலானோர் ‘தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட் ட, பிற்படுத்தப்பட் ட, ஒடுக்கப்பட்ட இனங்களில் இருந்து வந்தவர்கள் தாம்! அதிலும் அவர்கள் அனைவருமே ‘பெரியார் முன்மொழிந்த தமிழ்த்தேசியத்த ை’ வழிமொழிபவர்கள் தாம்! அவர்களுடைய அணுகுமுறைகளில், தமிழகத் தமிழர்களுக்கான போராட்டங்களில் இளமுருகுக்குக் கருத்து வேறுபாடு இருந்தால் அது கொள்கை, செயல்வழிமுறை என்று போய் இருக்கும். ஆனால் இளமுருகு இங்கு சாடுவதோ ‘தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் //கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்ப ில் இருந்து எழுந்ததுதான்// என்று! இதைப் படிக்கும் போது தான் தெரிகிறது – வயிற்றுக் கடுப்பு தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களுக் கா? இல்லை அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்து அவதூறுகளை அள்ளி வீச வேண்டும் என்று முனையும் கட்டுரையாளர் துரை இளமுருகுக்கா என்று!
//அவர் புலவர் என்று சொல்லுகின்றபோது சங்ககாலப் புலவன் முதல் இந்த காலப் புலவன் வரை எல்லோரையும் உள்ளடக்கியதுதான ்.// என்று பெரியாருக்குத் துணை போவது போல நின்று அவர் காலையும் வாரிவிட்டிருக்க ிறார் துரை இளமுருகு. தந்தை பெரியாரை ஒரு சமூகப் போராளியாகவும் சாதி ஏற்றத்தாழ்வு என்னும் இருளில் மூழ்கிக் கிடந்த சமூகத்திற்கு ஒளி தந்த விடிவெள்ளி எனவும் பார்ப்பதுமே சரியான பார்வையைக் கொடுக்குமே தவிர, அவரை இலக்கிய விமர்சகராக அணுகுவது இல்லை. அவர் காலச் சூழலில் பெரியார், தாம் அறிந்த இலக்கியங்களில் உள்ள குறை நிறைகளைச் சொன்னவரேயன்றி ஆராய்ந்து சொன்ன ஆராய்ச்சியாளர் இல்லை. நிலை இவ்வாறு இருக்க, பெரியார், இலக்கியங்களைப் பற்றிச் சொன்ன கருத்துகளை வைத்துக் கொண்டு அவரை அணுகுவது என்பதே ஒரு குறை பார்வை. இது காணாது என்று, சங்க இலக்கியங்களையோ உலகின் எம்மொழி இலக்கியங்களையோ அணுகும்போது அக்காலச் சூழலையும் அரசியல் சூழலையும் விளங்கிக்கொண்டு அணுக வேண்டுமே தவிர, இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பதன் மூலம் இல்லை. //சங்கப்பாடல்கள ில் பெரும்பான்மையான வற்றில் என்ன கருத்து இருக்கிறது? நாலு வரி தமிழில் பாடி அதில் இரண்டு வரி அரசனைப் புகழ்ந்து மீதமுள்ள இரண்டு வரியில் தன்னுடைய ஏழ்மை நிலைமையை எடுத்துச்சொல்லி எனக்கு காசு கொடு, சோறு போடு என்று கேட்டவை தானே!! பெரும்பாணாற்றுப ்படையும், சிறுபாணாற்றுப்ப டையும் நமக்கு கூறுகின்ற செய்தி இதுதானே.!// ஆற்றுப் படை என்பதே வழிகாட்டுவது என்னும் பொருளில் அமைந்தது தான்! அவ்வகை இலக்கியத்தை எடுத்து வைத்துக் கொண்டு ‘காசு கொடு, சோறு போடு’ என்று இளமுருகு கொச்சைப்படுத்து கிறார். சங்க காலம் என்பது மன்னராட்சிச் சமூகம். மன்னராட்சிச் சமூகம் என்பது பொதுவுடைமைச் சமுதாயம் இல்லை. அச்சமூகத்திலேயே பசியைப் பிணி என்று சொல்லியிருக்கிற ார்கள். ஆனால் இன்று மக்களாட்சிக் காலத்திலும் தானியங்களைக் கிடங்குகளில் தேக்கி வைத்தாலும் வைப்போமே தவிர, பசியால் வாடும் ஏழைகளுக்குக் கொடுக்கமாட்டோம் என்கிறதெ நடுவண் அரசு’ என்று கேட்டிருந்தால், அதில் இருக்கும் நேர்மை, அம்மன்னராட்சி காலச் சூழலில் எழுதப்பட்ட இலக்கியங்களைக் கொச்சைப்படுத்து வதில் இல்லை. இதே சங்க இலக்கியத்தில் தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதும் பதியப்பட்டிருக் கிறது. இப்படிச் சொல்வதன் மூலம் சங்க இலக்கியத்தை உயர்த்திச் சொல்வது நம்முடைய நோக்கமில்லை. ஆனால் ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்று திருக்குறள் கூறுவது போல, நன்மை தீமைகளை ஆராய்ந்து அவற்றை ஏற்க வேண்டுமே தவிர, இலக்கியவாதிகள் தமிழ் இலக்கியத்தை ஒரேயடியாகப் புகழ்வதும் தமிழ், தமிழர் என்றாலே துரை இளமுருகு போன்றவர்கள் ஒரேயடியாக இகழ்வதும் கண்டிக்கத்தக்கத ே!
கவனிக்க: முதலில் பெரியார் கருத்துடன் கட்டுரையைத் தொடங்கிய துரை இளமுருகு, முதலில் பெரியாரியவாதிகள ையும் பின்னர் தமிழ்த்தேசியவாத ிகளையும் பின்னர் சங்க இலக்கியங்களைக் கண்மூடித்தனமாகச ் சாடுவதன் மூலம் தமிழர் வரலாற்றையும் முழுக்க முழுக்கக் கொச்சைப் படுத்தியிருக்கி றார். துரை இளமுருகு கொண்டிருக்கும் இப்பார்வை, சமூக நலன் கொண்டோரிடத்தும் பெரியாரின் கருத்துகளின் மீது ஈடுபாடு கொண்டோரிடத்தும் கிஞ்சித்தும் வராது. மாறாக, ஆர்.எசு.எசு., வி.எச்.பி., பாரதிய சனதா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம ் வேண்டுமானால் இக்கருத்துகள் இருக்கலாம்.
மொத்தத்தில்,
1. //தமிழ்த் தேசியர்கள் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியர்கள் என்றெல்லாம் மார்த்தட்டிக்கொ ண்டு திரியும் கூட்டம் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்கிறது.?// //தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது. கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்ப ில் இருந்து எழுந்ததுதான். // என்னும் வரிகளில் தமிழ்த் தேசியர்களையும்
2. //மார்க்சும் மூலதனம் நூல் முழுவதையும் ஒரு தமிழ் தேசியர் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். ஆங்கில அறிவு இல்லாமல் அவரால் எப்படி இதை செய்ய முடியும்?.// என்னும் வரிகளில் நேரடியாகவே தோழர் தியாகுவையும்
3. //ஆங்கில மொழியை நாடுவதில் தமிழ்த் தேசியர்களும் பெரியார்வாதிகளு ம் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் இதையே மற்றவர்கள் செய்தால் மொழிப் பற்று இல்லாதவன் ஆங்கில அடிவருடி என்று இழித்தும் பழித்தும் உரைப்பார்கள்.// என்னும் வரிகளில் பெரியாரியவாதிகள ையும் தமிழ்த்தேசியர்களையும்
4. //யாருக்கும் எளிதில் விளங்கா வண்ணம் எழுதுவதே சிறந்த தமிழ்த் தொண்டு என்ற கருத்தையே தன் வாழ்நாள் கொள்கையாக கடைபிடித்த மறைமலை அடிகள்// என்னும் வரியில் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளையும்
5. //தனித்தமிழ் தூய தமிழர், செந்தமிழே இனியது என்று கூறிய பெருமகனார் யாரும் தமிழோடு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள வில்லை. ஆங்கிலத்தையும் துணைக்கொண்டே தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வளப்படுத்தி இருக்கிறார்கள். அதை சில நேரங்களில் ஒளிவு மறைவாகவும் சில நேரங்களில் வெளிப்படையாகவும ் செய்திருக்கின்ற னர்.// என்னும் வரிகளில் தனித்தமிழ் இயக்கத்தாரையும்
6. //சங்கப்பாடல்களில் பெரும்பான்மையான வற்றில் என்ன கருத்து இருக்கிறது? நாலு வரி தமிழில் பாடி அதில் இரண்டு வரி அரசனைப் புகழ்ந்து மீதமுள்ள இரண்டு வரியில் தன்னுடைய ஏழ்மை நிலைமையை எடுத்துச்சொல்லி எனக்கு காசு கொடு, சோறு போடு என்று கேட்டவை தானே!!// என்னும் வரிகளில் ஒட்டுமொத்தச் சங்க இலக்கியங்களையும ்
சாடி, அதிலும் அவர்கள் சொல்லாத கருத்துகளை அவர்கள் சொல்வதாக இட்டுக்கட்டி மக்களைப் பெரியாரியவாதிகள ், தனித்தமிழ் இயக்கத்தார், தமிழ்த்தேசியர் ஆகியோரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சியுடன் கட்டுரை எழுதியிருக்கிறா ர் துரை இளமுருகு.
பெரியாரியத்தின் ஆணிவேர் சாதிஏற்றத்தாழ்வ ுக்கொள்கை ஒழிப்பு ஆகும். இங்குள்ள பெரியாரியவாதிகள ில் பெரும்பாலானோர் அக்கொள்கையைத் தம் மட்டிலும் சமூக மட்டிலும் பரப்புவதற்கான முயற்சிகளைத் தமக்குத் தெரிந்த அளவில் செய்து வருகிறார்கள் என்பதும் பெரியாரைச் சொல்கின்றவர்கள் தாம் சாதி ஏற்றத்தாழ்வு ஒழிப்பில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதும் கண்கூடு. அதை விடுத்து, ‘நவீன பார்ப்பனர்கள்’ என்று அவர்களைச் சாடுவதன் மூலம் துரை இளமுருகு அவர்கள் கொண்டிருக்கும் கருத்து நமக்குத் தெளிவாகிறது. பெரியாரியவாதிகள ைச் ‘சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை ஆதரிப்பவர்கள்’ (அதன் இன்னொரு வடிவம் தானே ‘நவீன பார்ப்பனர்கள்’ என்று சொல்வது) என்று சொல்வதன் மூலம் துரை இளமுருகு அவர்களின் பார்ப்பன ஆதரவு நிலைப்பாடு சந்தி சிரிக்கிறது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்றையும் அடிநிலைகளாகக் கொண்டு செயல்படும் கீற்று இணையத்தளத்திலும ் பார்ப்பனர்களும் ஆர்.எசு.எசு. காரர்களும் பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டே உள்நுழைந்து விடுவார்கள் என்பதற்குத் துரை இளமுருகு போன்றவர்களே நேரடிச் சான்றாகத் தெரிகிறது. இது குறித்து கீற்று ஆசிரியர் குழு கவனமாக இருக்க வேண்டும்.
இல்லையே திரு வி க தமது நூலகளுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதவில்லையே ? பாரதி, பாரதிதாசன் எழுதவில்லையே பெரியார் எழுதவில்லையே
/. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ் நூல்களுக்கும் ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுவது ஒரு மரபாக இருந்தது. என்ன மரபு? தொல்காப்பியம் மரபா? வள்ளுவர் மரபா?
மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர் , பெருஞ்சித்திரனா ர் போன்றோரின் எழுச்சிக்குப் பிறகு தான் அந்நிலை மாறியது. ‘தமிழ் நூலுக்கு ஆங்கில முன்னுரை என்பதை விடுங்கள். ‘நூல் ஒரு மொழியில் முன்னுரை வேறொரு மொழியில்’ என்பதே ஒரு தாழ்வு மனப்பான்மை தான்! அதைதான் நானும் கூறி இருக்கிறேன் அது தாழ்வு மனப்பான்மை அன்று ஏமாற்று வேலை எனபது எனதுகருத்து
" தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளே ஆங்கிலத்தில் எழுதினாரே என்று சொல்வதன் மூலம், தனித்தமிழ் இயக்கமும் மறைமலையடிகளும் ஆங்கிலத்திற்கு எதிரிகள் என்பது போன்ற தோற்றம் அல்லவா இங்கு கட்டமைக்கப்படுக ிறது? இந்தப் போலித்தோற்றத்தை உருவாக்கி அதில் தனித்தமிழ் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த துரை இளமுருகு எண்ணுவது"
தேவநேயப்பாவாணர் ஆங்கிலத்திற்கு எதிராக சொன்ன கருத்துகளை நான் நிறையக்கூறமுடிய ும் " தமிழ் நட்டில் தமிழே இருக்கவேண்டும் தமிழ் என்றால் தனித்தமிழே"தமிழ ் ஒரு முற்றாதிக்கமுள் ள (சர்வாதிகாரமென் பதைத் தான் அவர் தெளீவாக சொல்லுகிறார்) அமைப்பில்தான் முன்னேற முடியும் என்று சொன்னவரும் அவரே முத்துக்க் குட்டி முழுப்பூசணிக்கா யை ஒரு கை சோற்றீல் மறைக்கப்,பார்க் கிறார்
2. //தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது.// என்று யாரைச் சொல்கிறீர்கள்? தமிழ்த்தேசியர்க ளும் பெரியாரியவாதிகள ும் நடத்துகின்ற தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் ஊடக மொழியாகக் கற்பிக்கப்படுகி றது என்பது உங்களுக்குத் தெரியுமா?
3. //தனித்தமிழ் தூய தமிழர், செந்தமிழே இனியது என்று கூறிய பெருமகனார் யாரும் தமிழோடு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள வில்லை. ஆங்கிலத்தையும் துணைக்கொண்டே தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வளப்படுத்தி இருக்கிறார்கள். அதை சில நேரங்களில் ஒளிவு மறைவாகவும் சில நேரங்களில் வெளிப்படையாகவும ் செய்திருக்கின்ற னர்.// தமிழே சிறந்தது என்று கூறுவது ஆங்கிலத்திற்கோ பிற மொழிகளுக்கோ எதிரானதா? தாய்மொழியாகிய தமிழே சிறந்தது என்றும் தனித்தமிழின் தேவை இருக்கிறது என்றும் கூறுவது ஆங்கிலத்தையோ பிற மொழிகளையோ எப்படிப் பாதிக்கும்?
துரை இளமுருகு அவர்களே, இந்தக் கருத்து ஏற்புடையதல்ல. மறைமலைக்கு ஆங்கில மோகம் இருந்தது என்பது உண்மை. ஆனால், அவரது தமிழ் மொழி நடையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதைவிட மோசமானது ஏதுமிருக்காது. மறைமலை என்கிற வேதாசலம் அவர்களின் கருத்துகளில் கடுமையாக நான் முரண்படுபவன் என்ற போதிலும் அவரது நடை ... சிறந்தது.
மற்றபடி பல கருத்துகளை நன்கு கூறியுள்ள நீங்கள்... இதற்கு மொழி குறித்த கொச்சையான பார்வை கொண்ட ஈ.வெ.ரா வை துணைக்கு அழைத்துக் கொண்டதுதான் கொடுமை.
RSS feed for comments to this post