1

யாருமில்லாமல் ஆடியது

ஊஞ்சல்

கவனிக்கவில்லை

காற்று அமர்ந்திருந்ததை

 

2

வினாடிகள் பறந்தன

சிறகுகளின்றி;

பறவைகள் பறந்தன

வினாடிகளின்றி...

 

3

கஞ்சியைக்

குடிக்க முடியவில்லை

பசிமயக்கம்!

 

4

அலகுதான்

அளவுதான்

அழகுதான்