கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: சுற்றுச்சூழல்
தென்னிந்தியாவில் நிலத்தடி நீர் வளம் நல்லபடியிருப்பதாகவும் வட மேற்கு இந்தியாவில் நிலத்தடி நீர்வளம் வேகமாக காலியாகிக்கொண்டிருப்பதாகவும் ‘கிரேஸ்' (GRACE Gravity Recovery And Climate Experiment) என்ற நாஸா விண்கலம் ஆராய்ந்து தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக (2002-2008) தொடர்ந்து செய்யப்பட்ட அலசல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கிரேஸ் விண்கல ஆராய்ச்சியில், 220 கிலோமீட்டர் உயர இடைவெளியில் இரண்டு விண்கலங்கள் ஆகாயத்தில் பூமியைச் சுற்றி பறந்து கொண்டே தொடர்ந்து பூமியின் கிராவிட்டியில் (நிறையீர்ப்பு) ஏற்படும் வேறுபாடுகளை கணிக்கப்படுகிறது. நிலத்தடி நீரின் இடப்பெயர்ச்சிகளால் கிராவிட்டியில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து நிலத்தடிநீரின் அளவைக் கணிக்க முடியும். கடந்த 6 ஆண்டுகளாக ஆராய்ந்து வந்ததில் வட மாநிலங்களில் நிலத்தடி நீர் ஆண்டுக்கு ஒரு அடி வீதம் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது (படத்தில் வடக்கே வட்டமாக காட்டப்பட்டுள்ள பகுதி) என்பதும், சில இடங்களில் மிகவும் அதிகமாக, அபாயகரமான அளவுக்கு இறங்கிக்கொண்டிருப்பதாகவும் சேட்டிலைட் தரவுகள் தெரிவிக்கின்றன.
நிலத்தடி நீர் என்பது மழை பொழிவிலிருந்து வரும் நீர் மண்ணில் உறிஞ்சப்பட்டு கீழே பாறை இடுக்குகளிலும், மெல்லிய குகைகளிலும், சொரிப்பாறைகளிலும், களிமண்களிலும் தேங்கிவிடுவதே. மழை பொழிவு குறைவதும் அளவுக்கு அதிகமாக போர் கிணறுகளைப் போட்டு உறிஞ்சுவதும் நிலத்தடி நீர்நிலை குறைவதற்குக் காரணமாக ஆகிவிடுகின்றன. நாம் நீரை எடுக்கும் வேகத்தில் நீர், நிலத்தில் இறங்குவதில்லை. ஒரு நாளில் எடுக்கப்பட்ட நீரை நிரப்ப குறைந்தது ஆறுமாத மழை பொழிவாவது வேண்டும்! பல மில்லியன் ஆண்டுகளாக தேங்கியிருந்த நீரை நாம் போர்வெல் கண்டுபிடித்த கொஞ்சகாலத்திலேயே தீர்த்துவிட்டோம். அதை நிரப்ப எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. தென் மாநிலங்களுக்கும் அந்த கதி வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. நீர் சிக்கனம் மிக அவசியம்.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
21 ஆம் நூற்றாண்டில் ஓசோன் படலமே இல்லாமல் செய்துவிடுவது என்று மனிதகுலம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகத் தோன்றுகிறது. National Oceanic and Atmospheri Administration (NOAA) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள முடிவுகள் இப்படித்தான் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. பூமியில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒசோன் படலம் உதவியாக இருக்கிறது. ஒசோன் படலம் மெலிந்து போனால் சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் மிக எளிதாக பூமிப்பரப்பை வந்து சேரும். இதனால் பூமியில் வாழும் தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், மனிதர்களின் உடல்நலம் இவற்றில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
சர்வதேச சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட chlorofluorocarbonகளின் அளவு வளிமண்டலத்தில் இப்போது குறையத் தொடங்கியிருந்த போதிலும், ஓசோன் படலத்தை மெலிதாக்கும் நைட்ரஸ் ஆக்சைடின் அதிகரிப்பு மனித குலத்தை அச்சுறுத்திவருகிறது. நைட்ரஸ் ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் இப்போது இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அதுவும் மனிதர்களின் செயல்பாடுகளால் அதிகரித்திருக்கிறது என்பதுதான் ஆய்வாளர்கள் தரும் எச்சரிக்கை மணி. பூமிப்பந்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட காற்று மாதிரிகளை ஆராய்ந்தபிறகு NOAA ன் விஞ்ஞானிகள் இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.
ஓசோன் படலத்தை மெல்லியதாக்கும் வாயுக்கள் ஹலோஜன் குடும்பத்தைச் சேர்ந்த குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள்தான். 1987ல் ஏற்பட்ட மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் chlorofluorocarbon மற்றும் ஹலோஜன் குடும்பத்தைச் சேர்ந்த குளோரின், புளோரின் வாயுக்களுக்கு கடிவாளம் போடப்பட்டது. ஆனால் நைட்ரஸ் ஆக்சைடின்மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. நைட்ரஸ் ஆக்சைடு பசுமை வாயுக்களுள் ஒன்று. எனவே புவிவெப்ப அதிகரிப்பிற்கும் இந்த வாயு காரணமாக இருக்கிறது. இத்துடன் ஓசோன் படலத்தைக் குறைப்பதற்கும் இந்த வாயுவே காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ வளிமண்டலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நைட்ரஸ் ஆக்சைடு மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியிடப்பட்டவை. மண்ணிற்கு உரமிடுதல், கால்நடைகளின் கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பெட்ரோல் டீசல் எஞ்சின்களின் செயல்பாடு இவற்றால் நைட்ரஸ் ஆக்சைடு வெளியிடுதல் அதிகரிக்கிறது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/08/090827141344.htm
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- பேராசிரியர் சோ.மோகனா
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூமி சூடாகிக் கொண்டிருக்கிறது, புவிக்கோளின் வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வளிமண்டலம் கொதிக்கிறது. கொதிக்கிறது என்ற தொடர் தகவல்கள் நமக்கு ஊடகங்கள் மூலம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இது தொடர்பான விஞ்ஞானிகளின் விவாதங்களும், அறிக்கைகளும், ஆலோசனைகளும் நம்மைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால்.. புவி என்னவாகும்? கி.பி. 2100இல் மனிதன் வாழமுடியுமா? என்ற தகவல்கள் எதிர்காலத்தில் நம் புள்ளை குட்டிகள், இந்நிலத்தில் வாழ முடியுமா என்றெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். வருங்காலத்தில் என்னதான் நிகழப்போகிறது? குடிக்க நீர் கிடைக்குமா? மூச்சுவிட நல்ல காற்று இருக்குமா? காரோட்ட எண்ணெய் கிடைக்குமா? என்றெல்லாம் ஒரே பயப் பிராந்திதான்! தெனாலி படத்தில் கமல் சொல்வது போல் பாத்தா பயம், தொட்டால் பயம், எழுந்தா பயம், நடந்தால் பயம் என ஏராளமான பயங்கள்.. நம்மைத் தொடுகின்றன. புவி வெப்பமயமாதலில் நெஜம்மாவே என்னதான் நடக்கிறது நண்பா?
புவியின் வெப்பமயமாதல் பற்றி, நாம் முழுமையாக பூமி சூடாவது என்ற விசயம் பன்முகப் பார்வை தேவை. இந்த பூமி சூடாவது என்ற விசயம் ஏதோ அடுப்பில் உலை வைத்து, அடுப்பை எரித்து, கொதிப்பது போன்ற ஒற்றை விஷயமல்ல கண்ணா? பலப் பல நிகழ்வுகள் இத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. காடுகள் அழிதல், எரிதல், நாம் மற்றும் உயிரினங்கள் சுவாசித்தல், பயிர் வளர்த்தல், விவசாயம் செய்தல், ஆடுமாடு வளர்த்தல், மின்சாரம் உற்பத்தி செய்தல், கறிசாப்பிடுதல், கார், ஸ்கூட்டர், பைக் ஓட்டுதல் என ஏராளம்... ஏராளமான காரணங்கள் இதுல ஒரு முக்கியமான விஷயம். என்னென்னா, அதுதாம்பா..... கரியமில வாயு, நீராவி, மீதேன் மற்றும் குளோரோடிரூவோ கார்பன் போன்றவைகளை மற்றவற்றைவிட மனுஷன்தாம்பா.. அதிகமாக உற்பத்தி பன்றான்!
அதுசரி இந்த பூமி எப்படி சூடாகிறது? இது தெரியாதப்பா.. சூரியன்தானே நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், ஆற்றலையும் தருகிறது என்கிறீர்களா? உண்மைதான். அவ்வளவு வெப்பம் சூரியனிலிருந்து வருகிறது? எவ்வளவு திரும்பிப் போகிறது? பொதுவாக ஒளி என்பது, ஒரு பொருளின்மேல் படும்போது அது பிரதிபலிக்கப்படுகிறது. உட்கிரகிக்கப்படுகிறது. கடத்தப்படுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும், ஒல்வொரு மாதிரி, ஒவ்வொரு அளவாய் நடக்கிறது. சூரியன் என்ற பெரிய்...ய்..ய் அடுப்பிலிருந்து, வெப்பமும், ஒளிவும், ஆற்றலும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நம்ம வீட்டு அடுப்புக்கு விறகு, கரி, மண்ணெண்ணெய் எரிபொருள் போடுவது போல, சூரிய அடுப்பின் எரிபொருள் ஹைட்ரஜன் அணுக்கள்.
சூரிய அடுப்பில், ஒவ்வொரு நொடியிலும், சுமார் 7,00,000,00, ஹைட்ரஜன் அணுக்கள், ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. இவை இணைந்து எரிவதால், அதன் விளைவால், 6,90,000,000 ஹீலியம் அணுக்கள் உருவாகின்றன. உபரியாக 5,000,000 டன் ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலாக, வான் வெளியில் வீசி அடிக்கப்படுகிறது. அப்ப, நம்ம பூமிக்கு எவ்வளவு வெப்பம் வருகிறது. என்கிறீர்களா? சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலில் 0.23% மட்டுமே .. பூமியின் மேற்பரப்பில் வந்தடைகிறது. அதாவது 2,000,000,000 சூரிய ஆற்றல் மட்டுமே பூமிக்கு வருகிறது. மற்றவை, வான் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.
பூமியை வந்தடையும், சூரியக்கதிர்களின் வெப்பம் மணிக்கு, ஒரு சதுரமீட்டருக்கு 135 கிலோவாட்தான்! இது பொதுவாக எப்போதும் மாறாமலே இருக்கிறது. இதனை நாம் சூரிய நிலையம் என்று அழைக்கிறோம். இந்த சூரியக்கதிர் வீச்சு பரவுதலும், வளிமண்டல வெப்படைதல் நடப்பதுவும், பூமியோட வளிமண்டலத்தில் சுமார் 100 கி.மீ. உயரத்தில் மட்டுமே! இந்த வளிமண்டலம்தான் பூமியோட போர்வை. இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நம்பூமியும், மற்ற கோள்கள் போல எப்போதோ குளிர்ந்து போயிருக்கும். ஒரு புல், பூண்டுக்கூட முளைத்திருக்காது. பூமி உருவானபோது குளிர்ச்சியான கோளாகத்தான் இருந்தது. வளிமண்டலம், பூமி உருவானதிற்கும் பிறகு உருவானது. இந்த வளிமண்டலம் என்ற காற்றுமண்டலம்தான் இன்று உயிர்கள் வாழ்தலுக்குரிய, வெப்பத்தை தக்க வைத்துள்ளது. இது என்னப்பா... புதுக்கதை என்கிறீர்களா? உண்மை இதுதான்.. நண்பா!
நம் புவிக் கோளிலுள்ள வளிமண்டலத்தின் உயரம் சுமார் 80 கி.மீ. இதனை வெப்பநிலைக்குத் தகுந்தபடி 5 பகுதிகளாகப் பிரிக்கின்றனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ வரை வளிமண்டலத்தின் 80% என்பது அடிவளி மண்டலத்திற்குள் உள்ளது. அடிவளி மண்டலம் என்று அழைக்கின்றோம். இதற்கு மேலே 10, 50 கி.மீ உயரம் வரை காணப்படுவது அடுக்கு கோளம் நண்பா! இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம்! ஆம் நண்பா! சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் 93, 99% அளவுக்கு, ஓசோன் தன் வசம் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. எனவேதான் நாம் புறஊதாக்கதிர்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.
ஓசோன் படலம், அடுக்கு வளிமண்டலத்தில் அடுக்குக் கோளத்தில் உள்ளது என்ற உண்மையைக் கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்ரி புய்ல்ஸன் என்ற விஞ்ஞானிகள்தான். 1913இல் தான் இப்படி ஒரு பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். ஓசோன் என்பது, மூன்று ஆக்ஸிஜன் தனிமங்களின் இணைப்புதான். புறஊதாக் கதிர்கள் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் மோதி, ராதனை ஆக்ஸிஜனாக உடைக்கிறது. பின் அந்த ஆக்ஸிஜன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஓசோன் ஆகிறது. இந்த ஓசோன் அடுக்குக் கோளம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் 20 ,40 கி.மீ உயரத்தில் மட்டும் ஓசோனின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதன் பரவல் தன்மை நிலையற்றதும் கூட தொடர்ந்து ஆக்ஸிஜன் பிரிவதும், இணைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை ஆக்ஸிஜன் ஓசோன் சுழற்சி என்கின்றனர். இந்த அடுக்கு கோளத்திலுள்ள ஓசோன் முழுவதையும், ஒரே அமுக்காக அமுக்கினால். முன்கனம் ஒரு சில மி.மீ மட்டுமே ஓசோன் சந்திக்கும்.
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
‘புவி வெப்ப அதிகரிப்பு’ என்பது இன்றைய மனிதகுலத்தின் தலைகாய்ந்த பிரச்சினை. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் இந்த சிக்கல் தோன்றியிருக்கிறது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரையும்போது கடல் நீரின் அமிலத்தன்மை கூடுகிறது. விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது. கடல்நீரில் சிறிதளவு அமிலத்தன்மை அதிகரித்தால் கூட கிளிஞ்சல்கள், சோழிகள், சிப்பிகள் இவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்டோனிபுரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இறுதி அறிக்கை கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதால் ஓடுடைய கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டுகிறது.
தேவைக்கு அதிகமாக மீன்பிடிப்பது, தீங்கு விளைவிக்கும் பாசிகளின் பெருக்கம், வளிமண்டல வெப்ப உயர்வு என்பவையெல்லாம் கடல் வளத்தை அழியச் செய்யும் காரணிகளாக இதுவரை கருதப்பட்டு வந்தன. இந்தப் பட்டியலில் இப்போது கடல்நீரின் அமிலத்தன்மையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
படிம எரிபொருள்களாகிய டீசல், பெட்ரோல் இவற்றை நாம் எரிக்கும்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரைவதால் கடல்நீரின் அமிலத்தன்மை கூடுகிறது. அமிலம், கால்சியம் கார்பனேட் எனப்படும் சுண்ணாம்பு போன்ற காரங்களை கரைக்கும் தன்மை உடையது. கிளிஞ்சல்கள், சோழிகள், சிப்பிகள் இவற்றின் உடல் கூடுகள் கார்பனேட் படிவங்களால் ஆனவை. இந்த வகையான கடல்வாழ் உயிரினங்கள் வளர்ச்சிப் பருவத்தில் தங்களின் கார்பனேட் கூடுகளை உருவாக்க அதிக காலம் எடுத்துக் கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின்போது செயற்கையாக கடல்நீர் தொட்டிகள் உருவாக்கப்பட்டன. 21ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னாலும் கடல்நீரில் ஏற்படக்கூடிய அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு பல்வேறு தொட்டிகளில் கிளிஞ்சல்களும், சோழிகளும், சிப்பிகளும் வளர்க்கப்பட்டன. இந்த உயிரினங்களின் கருவளர்ச்சி சோதிக்கப்பட்டதில் 50 சதவீதம் உயிரினங்கள் லார்வா பருவத்திலேயே அழிந்துபட்டன. மேலும் முழுவளர்ச்சி பெறுவதற்கான கால அளவும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. முழுவளர்ச்சி பெற நீண்ட காலம் ஆவதால் லார்வா பருவத்திலேயே இந்த ஓடுடைய உயிரினங்கள் அதிக காலத்தை கழிக்க வேண்டியிருந்தது. லார்வாக்கள் கடலில் நீந்தும்போது பிற கடல்வாழ் உயிரிகளால் உண்ணப்பட்டு விடுவதால் ஓடுடை உயிரினங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துவிடுகிறது. ஓடுடை உயிரினங்களைப் பாதுகாக்க, அவற்றை செயற்கையான கடல்சூழலில் வளர்த்து மீண்டும் கடலுக்குள் கொண்டுவிடும் வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இவற்றிற்காக அரசு மானியம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/10/091026162546.htm
தகவல்: மு.குருமூர்த்தி
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை