கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த பத்தாண்டுகளில் 1700க்கும் மேற்பட்ட சூழல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு போராளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வாடகைக் கொலையாளிகள், குற்றக்குழுக்கள் மற்றும் சொந்த அரசுகளால் 2012 முதல் 2021 வரை 1733 நிலப் பாதுகாவலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளி நாடு
குளோபல் விட்னஸ் (Global Witness) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த கொலைகள் பிரேசில், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் ஹாண்டுரஸ் நாடுகளில் மற்ற உலக நாடுகளை விட அதிகமாக நடந்துள்ளது. 2012 முதல் இந்த தன்னார்வ அமைப்பு சூழலிற்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுகிறது.சட் வாடி கொலை
2012ல் இந்த அமைப்பின் தலைமை செயல் அலுவலர் மைக் டேவிஸுடன் கம்போடியாவில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது போராளி சட் வாடி (Chut Wutty) கொல்லப்பட்டார். அதில் இருந்து இந்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.
செயலற்ற உலகம் - செயல்வேகம் பெற்ற கொலைகள்
2020ல் கொரோனா தொற்றினால் உலகம் செயலற்று முடங்கிக் கிடந்தபோதும் சூழலிற்காக பாடுபடுபவர்களின் கொலைகள் உலகம் முழுவதும் தொடர்ந்தன. அந்த ஆண்டில் மட்டும் சாதனையளவாக 227 பேர் கொல்லப்பட்டனர்.
அதிகார அமைப்புகளுடன் முரண்பட்டு சூழல் காக்க கேள்வி கேட்பவர்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகின்றனர். உலக மக்கட்சமுதாயம் இந்த நிலையை மாற்ற விழித்துக் கொள்ள வேண்டும் என்று மைக் டேவிஸ் கூறுகிறார். இந்த கொலைகளால் குறைந்த வருமானம் உடைய சமூகங்கள், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உலக மக்கட்தொகையில் 5% மட்டுமே. கொல்லப்பட்ட பிரிவுகளில் இவர்கள் 39%.
காரணங்கள்
சுரங்கத் தொழில், பெருமளவில் மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய விரிவாக்கத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை அதிகம் செய்கின்றன. இதற்கான காரணங்கள் பற்றி உலகம் நன்கறிந்ததே. இயற்கையைப் பாதுகாக்க போராடும் சூழல் மண்டலங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதால் இவை வேறு காரணங்கள் சொல்லி மூடி மறைக்கப்படுகின்றன.
மறைந்த சாட் வாடி, இத்தகைய கொலைகள் பற்றிய உண்மையான விவரங்கள் உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும், இவற்றைத் தடுக்க வழி காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புள்ளிவிவரங்கள்
2021ல் காங்கோ மக்கள் குடியரசில் விரங்கா (Virunga) தேசியப் பூங்கா காவலர்களில் எட்டு பேர் உட்பட 200 பேர் கொல்லப்பட்டனர். சுரங்கத் தொழிலும், எண்ணெய் எடுக்கும் வேலையும் அதிகமாக நடப்பதால் சமீப ஆண்டுகளில் இத்தகைய அநீதிகள் இங்கு அதிகமாகி வருகின்றன. கென்யாவில் சூழலியளாளர் ஜோஆனா ஸ்டச்பரி (Joannah Stutchbury) 2021ல் அவருடைய வீட்டிற்கு முன்னால் வைத்துக் கொல்லப்பட்டார்.
பிரேசிலில் நடப்பதென்ன?
கொலம்பியாவின் சூழல் செயல்பாட்டாளர் ஏஞ்சல் மைரோ காட்டஜினா (Angel Miro Cartagena) சூழல் காக்கும் பணியில் 2021ல் கொல்லப்பட்டார். 2022 ஜூனில் செய்தியாளர் டாம் பிலிப்ஸ் (Dom Phillips) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புகழ்பெற்ற கார்டியன் மற்றும் அஃப்சர்வர் இதழ்களுக்காக சூழல் அநீதிகள் குறித்து மிகத் தீவிரமாக எழுதி வந்தவர் இவர்.
இவருடன் சேர்ந்து, பழங்குடியினர் குறித்த ஆய்வாளர் புருனோ பெராரா (Bruno Pereira) பிரேசில் அமேசான் காடுகளில் ஜவாரி (Javari) பள்ளத்தாக்கில் கடத்திச் சென்று கொல்லப்பட்டார். பிலிப்ஸ் “அமேசானைக் காப்பாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். புருனோ நேர்முகங்கள் காணுவதில் அவருக்கு உதவியாக இருந்தார்.
சில வெற்றிகள்
தென்னாப்பிரிக்கா கிழக்கு கேப் பகுதியில் திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியை அழித்து ஷெல் நிறுவனம் எண்ணெய் சுரங்கம் நிறுவுவதை அப்பகுதி பழங்குடியினர் செப்டம்பர் 2022ல் நீதிமன்ற வழக்கு மூலம் தடுத்து நிறுத்தினர். இந்தோனேஷியா சாங்ஹி (Sanghie) தீவுப்பகுதியில் 2022 மே மாதத்தில் மக்கள் ஒன்றுகூடி கனடாவைச் சேர்ந்த நிறுவனம் அவர்களின் வாழிடத்தில் தங்கச் சுரங்கம் தோண்டும் முயற்சியை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தடுத்தனர்.
பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கிடைத்த இத்தகைய வெற்றிகளே ஆய்வறிக்கையை தயாரிக்க தன்னைத் தூண்டியது என்று இதன் ஆசிரியர் அலி ஹைன்ஸ் (Ali Hines) கூறுகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பிரேசிலில் 342, கொலம்பியாவில் 322, மெக்சிகோவில் 154, ஹாண்டுரஸில் 170, பிலிப்பைன்ஸில் 217 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக அநீதி, ஊழல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். ஊழல் அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு அநீதியை தீர்ப்பாக மாற்றிச் சொல்லும் நீதிபதிகள் போன்றோர் அதிகமாக இருப்பதால், தப்பித் தவறி விசாரணை நடந்தாலும் அது நீதியின் வழியில் செல்வதில்லை என்றும், சூழல் செயல்பாட்டாளர்களுக்கு உரிய அடிப்படை பாதுகாப்பை உலக அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. அநீதி செய்யும் நிறுவனங்கள் சட்டரீதியாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நகரங்களில் தெருவோர மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் தோட்டங்கள் அமைத்தல், நடைபாதைகளில் செடி வளர்ப்பு போன்றவற்றின் மூலம் பசுமைப் போர்வையின் பரப்பை அதிகரிப்பது நகரங்கள் சூடாவதைத் தடுக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
நகர விரிவாக்கம் மற்றும் புவி வெப்ப உயர்வு நகரங்களை நாளுக்கு நாள் வெப்பமடையச் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் 0.05 சி என்ற அளவில் வெப்பநிலை சராசரியாக அதிகரிக்கிறது. நாஞ்ஜிங் (Nanjing) மற்றும் ஏல் (Yale) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2000 முதல் 2021 வரை 2000 நகரங்களின் செயற்கைக்கோள் தரவுகளை கிராமப்புற தரை வெப்பநிலை அளவுகளுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வை நடத்தினர்.
நகரப் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை பத்தாண்டிற்கு சராசரியாக 0.56 டிகிரி, இரவு நேர வெப்பநிலை சராசரியாக 0.43 டிகிரி என்ற அளவில் அதிகரித்துள்ளது இந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கிராமப் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு சராசரியாக பகலில் 0.4 மற்றும் இரவில் 0.37 டிகிரி என்ற அளவில் இருந்தன. நகரங்கள் கிராமப் பகுதிகளை விட 29% வேகமாக சூடாகின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.நகரங்களின் அளவும் வெப்ப உயர்வும்
நகரங்களின் அளவு அதன் வெப்பமடைதலுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் மாநகரங்கள் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 0.69 டிகிரி சூடாகியுள்ளன. சிறிய நகரங்கள் 0.41 டிகிரி மட்டுமே வெப்பமடைந்துள்ளன. கண்டங்களைப் பொறுத்தும் நகரங்கள் சூடாவதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாநகரங்கள் அதிகமாக இருக்கும் ஆசியாவில் பகல் மற்றும் இரவு நேர வெப்பம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நகரங்கள் பகலில் குறைவான அளவே வெப்பமடைகின்றன. ஓசியானா பகுதியில் இருக்கும் நகரங்கள் இரவில் குறைவான அளவு வெப்பமடைகின்றன. ஆனால் ஆசிய நகரங்கள் பகல், இரவு என்று வேறுபாடில்லாமல் வெப்பமடைந்து வருகின்றன. ஆராயப்பட்டவற்றில் 90% நகரங்களில் நகர விரிவாக்கம், காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இங்கு பத்தாண்டுகளில் சராசரியாக மனித செயல்களால் மட்டும் 0.3 டிகிரி வெப்ப உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை
இந்தியாவில் கடந்த பத்தாண்டில் விரைவான நகரமயமாக்கம் 0.23 டிகிரி வெப்ப உயர்விற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் கட்டாந்தரையாக இருக்கும் நிலப்பகுதிகள் மரம் செடிகள் நட்டு வளர்க்கப்படும்போது குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை விட இரவில் இது அதிகம் நிகழ்கிறது. அப்போது தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி குளிரச் செய்கின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சிகாகோ மாதிரி
ஐரோப்பாவில் நகரப் பசுமையாக்குதல் மூலம் நகரங்கள் வெப்பமடைவதை சராசரியாக 0.13 டிகிரி சி என்ற அளவில் குறைக்க முடிந்துள்ளது. சிகாகோவில் 1995ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதலிற்குப் பிறகு நடைமுறைப் படுத்தப்பட்ட பசுமையாக்கல் திட்டத்தினால் கடந்த பத்தாண்டில் 0.084 டிகிரி வெப்பம் குறைந்துள்ளது.
நகர வெப்பமயமாவதை மேலும் மோசமாகாமல் தடுக்க நகர விரிவாக்கத் திட்டங்களின்போது அவற்றின் பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கொள்கை வகுப்பவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இயற்கை வழியில் தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் பசுமையாக்குதல், நகரங்களில் எல்லா காலநிலைகளுக்கும் பயனளிக்கிறது என்று க்ளாஸ்ட்டர்ஷெர் (Gloucestershire) கவுன்சிலின் காலநிலை மேலாளர் ஜான் பெர்க் (Jon Burke) கூறுகிறார். பசுமைப் பரப்பு அதிகரிப்பதால் நகரங்களில் குற்றச் செயல்கள், மனநலக் கோளாறுகள் குறையும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
40% பசுமைப் போர்வை
வெப்பநிலையைக் குறைக்க நகரப்பரப்பில் 40% பசுமை தேவை. ஆள்பவர்கள் இதற்கு உடனடி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதிகரித்து வரும் நகர வெப்பம் மற்றும் வெள்ளப் பெருக்குகளை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். நகர நிர்வாகங்கள் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையை விட இதற்குக் குறைவாகவே செலவாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி என்ற பெயரில் இருக்கும் மரங்களை வெட்டி, மனிதன் கட்டியெழுப்பும் கான்க்ரீட் காடுகள் நாளை அவனைக் காக்க முன்வராது. கிராமங்களை அழித்து நகரங்களாக்கி அவன் நாகரீகப் போர்வையால் உருவாக்கும் இடங்களே அவனுக்கு கல்லறையாவதற்கு முன், பசுமைப் போர்வையை ஏற்படுத்த முயலவேண்டும்.
மேற்கோள்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்

- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மரம் நடுகிறவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனே ஆதியை கை நழுவாமல் பற்றி இருக்கிறான். அவன்தான் தீர்க்கதரிசி.
எல்லாமே சுழற்சியின் ஞாபகங்களால் உருவானவை. கோடரி கதை.... விறகு வெட்டி கதைகளை தூரோடு தூக்கி எரியும் காலம் இது. தங்க கோடரி அல்ல... தங்க கோபுரமே கொடுத்தாலும் மரம் வெட்டோம் என்ற சபதமே இந்த பூமியை காப்பாற்றும். தேவைக்கு வெட்டும் போதும் அதற்கு மாற்றாக மரங்களை நட வேண்டும். அது தான் தெய்வ வாக்கு. அல்லது தாக வாக்கு.
மரம் நடுவது ஆர்வத்தில் கூட நடக்கலாம். அதை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுப்பது தான் ஆழம் நிரம்பியவை. மரங்களே பூமியை தாங்கி பிடித்திருக்கும் பந்த கால்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் அழகு முன்னால் நிற்கும் மரங்கள் தான். சின்ன சின்ன மரங்களின் வழியே சித்திரம் அசைக்கும் வீதி தெருக்கள். வேப்ப மரங்களின் காற்றும் நிழலும் உள்ளம் பூரிப்பவை. வீதிக்குள் நுழையும் போதே ஊரின் உயிர் காத்து நிற்பது போல நிற்கும் புளியமரம்... தினம் தினம் புதிதாக தெரியும். ஊரின் நடுவே ஓங்கு தாங்காக பரந்து விரிந்து கிளை சரிந்திருக்கும் ஆலமரம்... எல்லா நேரமும் மனிதர்களை சந்திக்கும் சிந்தனை திடல். கிணற்றுக்கு போகும் வழியில் இருக்கும் அரச மர அழகு கண்களில் மணி அடிக்க... அரச மர இலைகளில் லட்சம் இதயங்கள் மினு மினுங்கும்.
ஒரு மரம் என்பது இரண்டு தொழிற்சாலைகளுக்கு சமம். ஒன்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இன்னொன்று கார்பன்டை ஆக்ஸைடை உரிந்து கொள்ளும். மரமில்லாத மலை சூரிய வெப்பத்தை இன்னும் அதிகமாக இழுத்து தரும் என்பது சூழலியல் விதி. இங்கே நமது வாகனம் வெளியிடும் புகை... இமயமலைக்கு போகும் என்பது சூழலியல் சூட்சுமம். உலகின் மிகப் பெரிய பம்புகள் மரங்கள்தான் என்பதை அறிந்து விட்டாலே.. மரத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தனை வேகத்தில் வேரின் மூலமாக நீரை உரிந்து தனக்கு போக மிச்சத்தை ஆவியாக்கி விடும் மாய மந்திர தந்தை இந்த மரம்.
மரத்தை உற்று நோக்குகிறவன்... கண்டிப்பாக அதை வெட்ட முனைய மாட்டான் என்பது நான் கண்ட போதி.
மரத்தை வெட்டும் போது அது வெட்டுபவனுக்காவும் அழுகிறது. வெட்டுபவனின் வாரிசுகளுக்காகவும் புலம்புகிறது. உயிரின் பதறலை கொண்டு அலை பாய்கிறது. கவலை கொள்கிறது. பின் செத்து போகிறது. காலங்களை சுமந்து கொண்டு வாழ்வின் சாட்சியாய் நம்பிக்கையின் வேராய் நிற்கும் மரத்தை வெட்டி வீழ்த்தும் போது.. கால இடைவெளி பற்றிய ஆவணங்களை அழித்தெறிகிறோம் என்று பொருள்.
காடுகளை அழித்தல் தன் வீட்டுக்கே தீ வைத்தலுக்கு சமம் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். புலி இருக்கும் காடே வளமான காடு. புலிகள் இருக்க புதர்கள் வேண்டும். யானைகள் காட்டின் பேரழகு. காடு அழிய அழிய கோவிலில் பிச்சையெடுக்கும் யானைகளின் எண்ணிக்கை பெரும்பாவமென அரங்கேறத்தான் செய்யும். காட்டின் பிரமாண்டத்தை கையேந்த விடும் இந்த மானுடத்தை... விதிகளின் விழிகள் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தனக்கு தேவை என்பதைத் தாண்டி... பண்டமாற்று முறை கொஞ்சம் சிரமம் என்பதைத் தாண்டி... பணம் புழங்க துவங்கிய பிறகு... எங்கோ எவனுக்கோ ஆரம்பித்த பித்து.. முறுக்கேறி முறுக்கேறி.. மூச்சு முட்டி....கழுத்தை நெரித்து.. இதோ வெறும் பத்து பணக்காரனுக்காக மட்டுமே இந்த உலகம் தினம் தினம் தன் கண்களை மூடிக் கொண்டே குருட்டுப் பூனையாய் கிடைத்த விட்டத்தில் எல்லாம் எட்டிக் குதித்து கொண்டிருக்கின்றன. போகிற போக்கில் பலி ஆகும் யாவும்.... கூட மரமும் ஆகிறது. சிந்திக்கும் மனமோ வேகிறது.
அவிநாசி சாலையில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்தை இப்போது அனுபவிக்கிறோம். கோவையில் இத்தனை வெயில் எந்த காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில் என்று எதிர்காலம் இனி சொல்லும். வெயிலின் வெக்கைகளில் எல்லாம் உயிரோடு சருகான இலைகளின் கோபம் இல்லாமலா போகும்.
சரி தேவைக்கு சில போது மரங்களை அகற்ற வேண்டி தான் இருக்கிறது. அதற்கும் மாற்று விழி இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவது. ஆனாலும் அதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவதில்.... நம் மண்ணின் மரங்கள் மட்டுமே வேர் பிடித்து உயிர் பிடித்து மீண்டும் வளர்கின்றன.... மற்ற மரங்கள் பட்டு போகின்றன என்று அறிய வருகையில்.. மண்ணுக்கும் மரத்திற்குமான உறவை புரிந்து கொள்ள முடியும். மண்ணின் இயல்பை.. அதன் பாரம்பரியத்தை.. அதன் பண்பை உணர்த்த இதை விட நாம் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. மரமாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அதனதன் மண்ணில் இருக்கும் போதுதான் வேர் பிடித்த வாழ்வு சாத்தியமாகிறது. பத்துக்கு பாதியையாவது இந்த வழியில் காப்பாற்ற முடிந்தால் அதை செய்தல் தான் முறை.
என் மலை உச்சியில் மரத்தோடு மரமாக நின்று கத்தி விளையாடிக் கொண்டிருக்கும் என்னை எப்போதாவது நான் காண நேர்கையில் இப்படித்தான் தோன்றும். ஒரு பெரு மழை அசைத்து பார்க்கும் என் உயிர்ப்பின் சுவடுகளை நான் உணரும் தருணம் தான் இயற்கையின் கொடை. யாருக்காவது இறைவனின் கொடை என்றும் தோன்றலாம். இயல்பாகவே காடும் காடு சார்ந்த வாழ்வை விரும்புகிறவன் நான். என்னை போன்றோருக்கு மரம் மனிதனை விடவும் பெரியது. நமக்கு முன்பே இந்த பூமியில் உருவான திரு.. திருமதி அது. அதற்கான வெகுமதி அதை வணங்காவிடினும் வெட்டாமல் இருப்பது தான். அதற்கு உயிர் இருக்கிறது. அது வேலை செய்கிறது. அது நம்மை கண்காணிக்கிறது. அதற்கு மொழி இருக்கிறது. மௌனம் கூட இருக்கிறது. உற்று நோக்குகிறவனுக்கு அது கடவுளாகவும் இருக்கிறது. அதனால் தான். மரத்தைக் கண்டால்... மஞ்சள் துணியை சுற்றி சாமியாக்கி விடுவோரை அவர்களின் மூட நம்பிக்கைகளையும் தாண்டி மனம் விரும்புகிறது. ஒரு மரத்தை காக்க ஒரு கடவுள் தேவைப்பட்டால் இன்னொரு கடவுளையும் உருவாக்கலாம் என்பது மர நீதி. மரம் எல்லாவற்றையும் விட பெரியது. வேர் பிடித்து கிளை பரப்பி இலைகள் விட்டு துளிர்கள் விட்டு... காய்த்து பூத்து.....வெயில் பிடித்து.... மழை குடித்து.. காற்று அசைத்து... பறவை பட்சிகள் புழு பூச்சிகள் வாழ இடம் கொடுத்து...என நிழலும் நிஜமுமாக நிற்கும் மரத்தை ஒப்பிட்டு மனிதனை மர மண்டை என்றால் அது நியாயம் இல்லை தானே.
எப்போதும் மரம் அசையும் காற்றுடன்.....எப்போதும் குடை மறந்த மழையுடன்...எப்போதும் மனம் நிறைந்த குளிர்ச்சியுடன் கழிந்த பால்யத்தை இப்போது நினைத்தாலும் மனமெங்கும் மழை தான். விழியெங்கும் கதை தான். எப்போது திறந்தாலும் ஓடி வரும் ஓடையில் படக்கென்று படுத்து நாயைப் போல வாய் வைத்து நீர் குடித்தவன்..... இன்று பிளாஸ்டிக் போத்தலில் வாங்கி மகானைப் போல குடிக்கிறேன். குலை நடுங்க...... குரல்வளை பிடுங்க... தாகம் மிரளும் தத்துவம் என்னை சூழ்கிறது.
கண் உறுத்தும் வறட்சிக்கு முன் ஓ வென குற்ற உணர்ச்சியோடு நிற்கிறேன். நானும் கூட இதற்கு காரணம்தான். உள் மனம் சத்தமிட்டு கூறுகிறது. நானும் இந்த காற்றை மாசு படுத்தி இருக்கிறேன். மரங்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாஸ்டிக் கோப்பைகளை மற்ற குப்பைகளோடு சேர்த்துப் போட்டிருக்கிறேன். சாக்லேட் கவர்களை.......கொரியர் கவர்களை......கூச்சமே இல்லாமல் சாலையில் போட்டு போயிருக்கிறேன். கொஞ்ச காலம் முன்பு வரைகூட கறி வாங்க... மீன் வாங்க.. காய்கறி வாங்க... வெறும்கையோடு சென்று.... வாங்கியவைகளை பாலிதீன் கவர்களில் வாங்கி வந்திருக்கிறேன். வெட்கி கவிழ்கிறேன். துக்கித்து உணருகிறேன். உள்ளுக்குள் எழும் அசைவை எந்த மர அசைவால் நிறுத்த.
இயல்பாகவே மண்ணுக்கும் மரத்துக்கும் துரோகம் செய்வது தவறென்று நினைக்கும் மானுடத்தை இழக்க வைத்திருக்கிறது..... இன்றைய நவீனம்.
ஒரு சொட்டு நீருக்காக அண்டை மனிதனின் ரத்தம் குடிக்கும் மரணத்தனம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கு முன் விழித்துக் கொள்ள வேண்டும். மரங்களின் கரம் பற்றிய மனிதன் பிழைத்துக் கொள்கிறான்.
சூட மரம்... சவுக்கை மரம்... பூ மரம்... தண்ணிக்கா மரம்... தைல மரம்... முகர வீங்கி மரம்... தேக்கு மரம்...ஈட்டி மரம்... என நினைவுகளில் அசையும் மரங்களின் ஈர காற்றில் இதயம் நிரம்புகிறது. மரங்களில் இதயம் வரைந்தது போதும்.... இளைய சமுதாயமே.... மரத்தை இதயத்தில் வரைவோம்.
எனது கவிதை ஒன்றோடு கட்டுரையை முடிக்கிறேன்.
"மரம் தொலைத்த வேதனை
மனிதனுக்கு இல்லாமல் இருக்கலாம்
கூடு தொலைத்த பறவைக்கு
கூடுதல் கவலை அது..."
- கவிஜி
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!