கோவாவில் திரைப்பட பஜார்
இந்தியத் திரைப்படங்களை கௌரவிக்கும் பொருட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் கோவாவில் நான்கு நாட்கள் திரைப்பட பஜாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரான திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் திரையிட்டு படங்களின் வர்த்தகத்தை உயர்த்துவதற்காக இந்த சிறப்பு திரைப்பட பஜார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படப் பிரிவில் 15 படங்களும், ஆவணப்பிரிவில் 10 படங்களும் ஏற்பாடு செய்யப்படும். திரைப்பட இயக்குனர்கள் கலந்தாய்வு, படம் தயாராகும் முறை குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.
நவம்பர் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு இந்த திரைப்பட பஜார் நடைபெறும். இதில் தங்கள் திரைப்படங்கள் இடம்பெற விரும்பினால் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு ஆகஸ்டு மாத இறுதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|