 |
கவிதை
எவ்வகை ரோஜா?...
ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்..
லேசாய்ப்பனி பெய்திடுமோர்
அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்
அனிச்சயாய் என்
விரல்களினிடையில் சிக்குண்ட
இந்த கருப்புக்குடைக்குள்...
எனக்குத்துணையாய், அழகிலவள்
துப்பட்டாவில் பூத்திருக்கும்
ரோஜாவிற்க்கிணையாய்,
தெருவோரம் தேங்கி நிற்கும்
தண்ணீரில் நீந்திப்பழகும்
தவளைகளைத் தட்டிக்கொடுக்கும்
புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம்
ரோஜாக்களில் இவள்
எவ்வகை என்றே...
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.. ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|