‘சமூக நீதி பற்றிப் பேசுவதற்கு, திராவிட இயக்கக் கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?’ என்று பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு கேட்டதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
திராவிட இயக்கம் என்பதே, சமூக நீதிக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம்தான் என்பது, தமிழக வரலாற்றின் அரிச்சுவடி அறிந்தவர்கள் கூட அறிவார்கள். ஆனால் மருத்துவருக்கு மட்டும் ஏனோ இப்படி ஐயம் எழுந்திருக்கிறது. அவருக்காக இல்லை எனினும், இளைய தலைமுறையினர் சில வரலாற்றுச் செய்திகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் அக்கறையில் திராவிட...








