சகிப்புத்தன்மை, சாத்வீகம் மற்றும் சகோதரத்துவத்தின் பிறப்பிடம் என்று வெற்று டப்பாவை உருட்டிக் கிடக்கிறது இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அதன் அடைமொழிக்கு ஒரு அர்த்தமுமில்லை. பௌத்தம் சமணம் உள்ளிட்ட மாற்றுக்கருத்துக்களை வன்முறைகளாலும் புறக்கணிப்புகளாலும் ஒழித்துக்கட்டியவர்களின் இன்றைய வாரீசுகளான இந்துத்துவ தீவிரவாதிகள் சகிப்பின்மை என்ற கொடுந்தடத்தில் சமூகத்தைக் கடத்திச் செல்ல முனைகிறார்கள். இவர்களது வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் வழக்கு தொடுத்து அலைக்கழிக்கும் மலிவான...






