Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.

சிறப்புப் பகுதி

கீற்று எதிர்கொள்ளும் நெருக்கடி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. அதாவது ஒரே server-ல் கீற்று போன்ற பல இணையதளங்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் server-க்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறைவாக இருக்கும். அதே நேரத்தில் நமது இணையதளத்தின் பயன்பாட்டு அளவு (CPU usuage, Memory usuage & MySQL usuage) வரம்பிற்குட்பட்டதாக இருக்க வேண்டும். அண்மைக்காலமாக அந்த வரம்பைத் தாண்டி கீற்று இயங்கி வருகிறது. காரணம் கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும்...

விரிவு...
 

தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தேசிய சுய நிர்ணய உரிமைக்குட்பட்டு தனிநாடு விடுதலைப் போராட்டம் நடத்தும் தேசிய இனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஹேக் நகரில் (நெதர்லாந்து) செயல்படும் சர்வதேச நீதிமன்றம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஒரு பிரகடனம், மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.  செர்பியாவிலிருந்து சுய நிர்ணய உரிமையின் கீழ் தனது விடுதலைப் பிரகடனத்தை கடந்த 2008 டிசம்பரில் கொசாவா அறிவித்தது. கொசாவாவின் விடுதலைப் பிரகடனத்துக்கு சர்வதேச நீதிமன்றம் இப்போது ஏற்பு வழங்கிவிட்டது.
 
கொசாவா, தனிநாடு...

விரிவு...
 

கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு தமிழக எழுத்தாளர்கள் எதிர்ப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு உலகமெங்கும் ஆதரவு இருப்பதாக அந்த மாநாட்டுக் குழுவினர் தெரிவித்து வரும் வேளையில், மாநாடு குறித்து தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கருத்து கேட்டோம். அதன் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

எழுத்தாளர் மதிவண்ணன் (தலைவர், அருந்ததியர் உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு): கடந்த ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், சர்வதேச சமூகம் எப்படி வெறும் பார்வையாளராக‌ இருந்ததோ அதே போல் தான் தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களும்...

விரிவு...
 

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
2010 சனவரி மத்தியில் கொழும்பு சென்றிருந்த வேளையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கள் கேட்டார்கள். செம்மொழி மாநாட்டின் உயிர் நிலையானது அரசியல் ஆதாயம் பெறுவதில் தங்கியுள்ளது பற்றி- அதற்கான எதிர்வினைகள் எங்களிடமிருந்து தொடங்கியுள்ளது பற்றி எடுத்து வைத்தேன்.

அவர்களுடன் உரையாடிய வேளையில் 2011 – சனவரியில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும், அதன் பொருட்டான ஆலோசனைக் கூட்டம் சனவரி 3ம் நாள் நடத்தப் பெற்றதெனவும் தெரிவித்தார்கள்...

விரிவு...
 

அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல்...

விரிவு...
 

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
17.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின்' காஞ்சிபுர மாவட்டப் பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை...

விரிவு...
 

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
காஷ்மீரில் ஜூன் 11லிருந்து ஆகஸ்ட் 8க்குள் மட்டும் 51 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் நடப்பது என்று இந்திய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் அரங்கக் கூட்டம் ஒன்றினை தகவல் தொழிற்நுட்பத் துறையினர் மற்றும்...

விரிவு...
 

தமிழ்த் தேசியமும் முஸ்லிம்களும் - விஷமிகள் விவரிக்கும் கற்பித முரண்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
"சிங்களவன் போட்ட குண்டில்
50 பேர் பலியானார்கள்.
500 பேர் புலியானார்கள்"  -  பேரா.ஹாஜா கனி
 
              ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய சிந்தனை மென்மேலும் தன்னகத்தே செழுமை அடைந்து விரிவடைவதை நாம் காண்கிறோம். நடந்து முடிந்திருக்கும் ஈழப்போரும், அதில் தமிழர்கள் அடைந்த பின்னடைவும் தமிழ்த் தேசிய சிந்தனையினை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கான...

விரிவு...
 

தமிழக அரசுப் பணி வேண்டாம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கான தேசிய ஆணையத்திற்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உமாசங்கர் எழுதியுள்ள கடிதம் - தமிழக அரசு மீது இந்திய ஆட்சிப்பணி அலுவலர் சி. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

அனுப்புநர்

சி. உமாசங்கர் இ.ஆ.ப. (1990ஆம் ஆண்டுப் பிரிவு)
எண். 33, பாலகிருட்டினன் சாலை,
டி1, அசோக்கு சுவச்தி அடுக்ககம், மூன்றாவது தளம்,
வால்மீகி நகர், திருவான்மியூர்,
சென்னை.  தொலைப்பேசி: 044-42020423, செல்பேசி: 9444300123.  

பெறுநர்

தலைவர்,
தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்,
உலோக்கு நாயக்கு பவன், கான்...

விரிவு...
 

இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
உலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பின் (IFAD) 33வது ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் கனாயோ வீன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிப்பதாகவும் (33 கோடிபேர்) குறிப்பிடப்படுகிறார். ஐக்கிய சபையின் செயலாளர் பான் கீ மூன் பசியால் உலகில் சுமார் 17,000 குழந்தைகள் தினமும் இறப்பதாகவும், சராசரியாக 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாகவும்...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

அதிகம் பேர் படித்தது

சிறப்புப் பகுதி

தொடர்புடைய படைப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP