சுமார் 60 ஆண்டுகளுக்கம் மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் பேரிழப்புகளுக்கும், கடும் பின்னடைவுகளுக்கும் ஆளாகியுள்ளது. தமிழீழ மக்களைக் காக்கும் முன்னணிப் படையாக விளங்கிய புலிகள் அமைப்பை வீழ்த்திவிட்ட மிதப்பிலும் அகங்காரத்திலும் சிங்கள அரசு தற்போது அப்பாவி மக்களைப் பழிவாங்கி வருகிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களை முள் கம்பி வேலிகளுக்குப் பின்னே அடைத்து வைத்து, அவர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளை இழைத்து வருகிறது.








