குழந்தை கையில் பிடித்துப் பறக்கவிட்ட
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை

-

நான் கடந்து வந்துவிட்டதால்
எதுவும் இன்னமும் நிகழாமல்
இருக்கப்போவதில்லை

-

உனக்கு என்ன வேண்டும் என
என்னுள்ளிருந்துகொண்டே
கேட்கிறாய்

-

மன்னிக்கவியலாத
தவறுகள் செய்தபோதும்
கவனியாது விட்டுவிடுவது
உன்னிருப்பை என்னுடன்
உறுதி செய்துகொள்ளத்தான்

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It