வரைந்துகொண்டிருந்த
ஓவியத்திலிருந்து
ஆரஞ்சுச்சுளைகள்
ஒவ்வொன்றாகப் பிளந்து
விழுந்து கொண்டிருக்கிறது
வளைந்த தோலை
வரைய முயலுமுன் காய்ந்த சுளையை
மீண்டும் உயிர்ப்புடன் வைத்திருக்க
தூரிகையை வைத்து
சற்றே ஒரு கீற்று
அதன்மேல் தீட்டிவைத்தேன்
மேசையில் காபி ஆறிவிட்டிருந்தது.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It