தோல் கறுத்த எரிமலையின் சடலம்
வேரொடு வெட்டியெறியப்பட்ட அடிமரத்தின்
உதிர்ந்து போன மூச்சுகளின் முடிச்சுகள்
தார்ச் சாலையில் கிடக்கும்
ஏழை விவசாயின் கையளவு நிலத்தின் மீது
சிந்தப்பட்ட காயாத கண்ணீர்
உதடுகளுக்கு ஊடுருவி வெளியேற இயலாமல் கிடக்கும்
காதலின் உலர்ந்த சொல்
வெளியேற்றப்பட்ட உடலின் மீது
கவிழ்ந்து கிடக்கும் காயத்தின் மங்கிக் கறுத்த சிவப்பு நிறம்
தூக்குக் கயிற்றின் மொழி பெயர்க்கப்படாத வாக்குமூலம்
இவையெல்லாவற்றையும் வேறெங்கே வைக்க முடியும்?
கவிதை தன் கதவு திறந்து காத்துக் கொண்டிருக்கும் போது!!
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
Comments (0)
Joomla components by Compojoom
| < முன் | அடுத்தது > |
|---|








