அவசரத்தேவை
வேறு
வழியேயில்லை.
தேடிச் சென்ற
நண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..
உறவுகள்
உதட்டைப்
பிதுக்க..
பழகிய சில
இடங்களில்
'பழைய பாக்கியே
இன்னும்..' என
இழுக்க..
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி
அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்' எனத்
தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே
மனசு..
கைமாத்தாகக்
கவிதையாவது
கிடைத்ததே என்று.
- ராமலக்ஷ்மி, பெங்களூர்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தற்சார்பு மிக்க கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்குத் தேவை
- புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் - தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள்
- சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம்
- திராவிடம்... திராவிடர்… - 3
- கொசுக்களைக் கவரும் சோப்புகள்
- உதிரும் இலை
- குடி அரசு “குபேர” பட்டணத்தின் சிறப்பா? சிரிப்பா?
- தமிழ்நாடு ஜூன் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- திமுக அரசு செய்தாக வேண்டிய மூன்று பெரும் பணிகள்
- இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி இழப்பு எழுப்பும் கேள்விகள்
- விவரங்கள்
- ராமலக்ஷ்மி
- பிரிவு: கவிதைகள்
விடக் கூடாதென//
ஏமாற்றத்தின் வலியினை மறக்க
ஏதோ ஒன்று அவசியப்படுகின்றது,
சிலருக்கு சில நேரங்களில் கவிதையாக,
சிலருக்கு சில நேரங்களில் உணர்வற்ற மெளனமாக.
நல்ல கவிதை மேடம்.
RSS feed for comments to this post