அந்தக் காலங்களில் வீடுதோறும் பின்பக்கத்தில் கிணறு இருக்கும். வீட்டுப் பின்புறத்தைக் கொல்லைப்புரம் என்று சொல்வர். புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் கிணறுதான் தோண்டு வார்கள். பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவர். கிணற்றைச் சுற்றிய பகுதியை கிணற்றடி என்றழைப்பர். துவைப்பதற்குக் கல் போடப்பட்டிருக்கும். சில வீடுகளில் சாய்வாக, சற்று உயர மாக கல்பதித்துக் கட்டப்பட்டிருக்கும். கிணற்றிற்கு இரண்டு பக்கமும் தூண் எழுப்பி.. இரண்டையும் நீண்ட சட்டத்தால் இணைத்திருப்பார்கள். அந்தச் சட்டத்தில் மர உருளை தொங்க விடப்பட்டிருக்கும்.

இதுதான் பிற்காலத்தில் இரும்பு ராட்டினமாக மாற்றம் பெற்றது. அதில் நீண்ட கயிற்றைப் போட்டு நுனியில் வாளியைக் கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப் பர். இந்த சின்ன வாளியை ‘கடகா’ என்று அழைத்தனர். கிணற்றில் இருந்து நீர் இறைத்து ஆண்கள் அப்படியே தலையில் ஊற்றிக் குளிப்பர். இதுவும் ஒரு வகையான உடற் பயிற்சியாகக் கருதப்பட்டது. இந்த நீர் போய் பாய்வதற்கென்று பூச்செடிகள், வாழைக் கன்றுகள் கொல்லை யில் வளர்ப்பார்கள். சில வீடுகளில் கிணற்றுநீர் குடிக்க உகந்ததாக இருக்கும். பெரும்பாலான வீடுகளில் சற்று உப்புக் கலந்தாற்போல இருக்கும்.

மற்ற புழக்கத்திற்கு கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டு குடிநீருக்கு தாய்மார்கள் வேறு இடம் போய் எடுத்து வருவார்கள். இந்தக் கிணற்றை வருடந்தோறும் சுத்தம் செய்வார்கள். அதற்குத் தூர் வாருதல் என்று பெயர். தூர் வாரும் தொழில் செய்ய ஊருக்கு நால்வர் இருப்பார்கள். சரியாகக் கணக்கு வைத்து ஆண்டுதோறும் அவர்களே வீடு தேடி வந்துவிடுவர். சாப்பாடு போட்டு ஐந்து ரூபாய் கொடுத் தால் போதும். கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

கிணற்றை வைத்து பல பழமொழிகள் உலவுகின்றன. அவைகள் ஆங்காங்கே பேச்சு வழக்கில் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன.

“கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல”
“பாதிக் கிணறு தாண்டிய கதையாய்”
“தோட்டத்தில் பாதி கிணறு”
“அவன் ஒரு கிணத்துத் தவளை”
“கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டு போகப் போகுது”
“கிணற்றில் போட்ட கல்லாக”
“இறைக்க இறைக்கத்தான் கிணறு ஊறும்”

-இப்படிப் பழமொழிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

“வீட்டில் இருக்கிற அண்டாவுக்கு அடைப்பில்லை” என்ற விடுகதையும் கிணற்றிற்கு உண்டு.

மல்லாங்கிணறு, நாரைக் கிணறு, கிணத்துக் கடவு போன்ற பெயர்களில் தமிழகத்தில் ஊர் களும் இருக்கின்றன. திருச்செந்தூரில் நாழிக் கிணறு உள்ளது. இது வள்ளி நாழிகை நேரத்தில் தோண்டினாளாம். அதனால் இதன் பெயர் நாழிகைக் கிணறு ஆனது. மிக அருகில் கடல் நீர் கடுமையான உப்பாக இருந்த போதிலும்.. எடுக்க எடுக்க இதில் நல்ல தண்ணீர் வருவது இதனுடைய சிறப்பு ஆகும்.

கிணற்றை சில பகுதிகளில் கேணி என்றும் சொல்வதுண்டு. அதனால்தான் கல்வியின் சிறப்பைச் சொல்ல வந்த வள்ளுவர்,

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”

-என்கிறார்.

கிராமங்களில் பொதுக்கிணறு இருக்கும். அதில் தான் கிராமத்தினர் தண்ணீர் எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்  வாளி போட்டு தண்ணீர் இறைக்க அனுமதி கிடையாது. பிற ஜாதி யினர் தண்ணீர் எடுக்கும் போது ஓரமாய் நின்று தண்ணீரை குடத்தில் ஊற்றச் சொல்லிப் பிடித்துப் போக வேண்டும். இதனை அறிந்த பாரதி, “கிராமங்களில் பறையர்களைப் பற்றிப் பேசு; அவர்களை ஒன்று திரட்டு; விபூதி நாமத்தைப் பூசு; பள்ளிக்கூடம் வைத்துக் கொடு; கிணறு வெட்டிக் கொடு”-என்று கட்டுரையில் எழுதினார்.

சிராவயல் என்ற கிராமத்தில் அரி ஜனங்களுக் காக தனிக்கிணறு தோண்டும் பணிகளைத் துவக்கி வைக்க பெரியாரைக் கூப்பிட்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில், “உங்களுக்காகத் தனியாக தண்ணீர்க் கிணறு தோண்டுவதைவிட, பொதுக் கிணற்றில் நீர் எடுக்கப் போராட வேண்டும்”- என்று பேசி யிருக்கிறார் பெரியார்.

1935ம் வருடத்தில் மானாமதுரையில் “காந்தி பொதுக்கிணறு” என்ற பெயரில் அரிஜனங்களும் பயன்படுத்தும் வகையில் கிணறு ஒன்று தோண்டப் பட்டது. இதற்கு நன்கொடையாக அந்தக் காலத்தி லேயே காந்திஜி நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். காந்திஜி தன் வாழ்நாளில் நன்கொடை என்று கொடுத்தது இங்குதான் என்பது குறிக்கத்தகுந்த  தகவலாகும். சட்ட மேலவை உறுப்பினர் பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் தலைமையில், ராஜாஜி முன்னிலையில் காந்திஜி பொதுஜன உபயோகத் திற்காக இதனை அர்ப்பணித்திருக்கிறார். இப் போது இந்தக் கிணறு இருந்த இடம்  தெரிய வில்லை. வணிக வளாகம் கம்பீரமாகக் காட்சி தரு கிறது. 1980 வரை இந்தக் கிணற்றை பொது ஜனங் கள் உபயோகப்படுத்தியுள்ளார்கள்.

கிராமங்களில் தற்கொலை செய்யும் பெண்கள் நீர் நிறைந்த கிணறுகளைத்தான் தேர்ந்தெடுப்பர். பெற்ற பிள்ளைகளை கிணற்றில்போட்டு, தானும் விழுந்து செத்ததாக ‘நல்லதங்காள்’ கதை சொல் கிறது. புகுந்த வீடு சரியில்லை என்றால் “பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்” என்ற சொற் றொடரைப் பயன்படுத்துவோர் நகரங்களில்கூட இருக்கின்றனர்.

சமீப வருடங்களில் நகரங்களில் பிறந்த பிள்ளை கள் கிணற்றைப் பார்த்திருக்க மாட்டார்கள். வீடு களில் கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. ஆழ்குழாய்  தோண்டிவிட்டோம். கிணற்றடி குழாயடி ஆகிப் போனது. கொல்லை அழிக்கப்பட்டு சிறு அறைகள் அடங்கிய வீடாக மாற்றப்பட்டு வாடகைக்கு விட்டுவிட்டோம். கிராமங்களில் விளை நிலங் களில் மட்டும் பம்புசெட்டுடன் கிணறுகள் இருக் கின்றன. ஊருக்குள் பொதுக்கிணறு மூடப் பட்டு  மேனிலை தண்ணீர் தொட்டி கட்டி விட்டோம்.

ஒவ்வொரு கோயிலுக்கு முன்பாக இருந்த கிணறுகளும் மூடப்பட்டுவிட்டன. அல்லது உபயோ கமற்றுப்போய்விட்டன. கோயில்களிலும் குழாய் இணைப்புக் கொடுத்துவிட்டோம். ராமே°வரத்தில் கடலில் குளித்துவிட்டு கோயிலுக் குள் 21 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவார்கள். இவற்றை ஆன்மீக மொழியில் ‘புண்ணியத் தீர்த்தங் கள்’ எனச் சொன்னாலும் நிஜத்தில் இவைகள் வெறும் கிணறுகளே.

மானாமதுரையில் ஆனந்தவல்லி ஆலயத்திற்கு எதிரில் ஒரு கிணறு இருந்திருக்கிறது. இதன் பெயர் சந்திரபுஸ்கான் ஆகும். இந்தக் கிணற்று நீருக்கு தொழுநோயைக் குணப்படுத்தும் தன்மை இருந்த தாம். அதனை அடிப்படையாக வைத்துத்தான் கிருத்துவ மிஷினரியால் மானா மதுரை யில் தொழு நோய் மருத்துவமனை துவக்கப்பட்டு அது இன்றும் செயல்படுவதாக பழம் பெரியோர்கள் சொல்லக் கேட்டதுண்டு.

தொழில்நுட்ப வளர்ச்சியால், காலப்போக்கில் ஏற்பட்ட நவீன நாகரிகங்களால், பல  வசதிகளை, மாற்றங்களை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இருந்தாலும் கிணற்றைப் பயன்படுத்திய பழைய காலங்களை, கிணறு தொடர்பான தகவல்களை நினைத்துநினைத்து அசை போடுவதில் ஒருவித மன சுகம் இருக்கத்தான் செய்கிறது.

Pin It