யோசித்துப்பார்க்கையில்
அது உண்மை என்று தான்
தோணுகிறது.

எப்போதும் வேண்டும் என்று கூறும் ஒன்று
எப்போதும் வேண்டாம் என்று கூறும் ஒன்று
பரவாயில்லை,
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறும் ஒன்று

ஆக மூன்று மனதுகள்
சரிதானே ?
ஆம் சரிதான்
என்று கூறியது
நான்காவது மனது.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It