விடுதலைப் புலிகளேக் குறைகூற கருணாநிதிக்குத் தகுதி உண்டா?

மிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் விடுதலைப்புலிகளேக் கொச்சைப் படுத்தியும் கருணாநிதி விடுத்த அறிக்கைக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

பசப்படி: இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளேவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மெளனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது?

பதிலடி: இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதைத் தடுக்கத் தவறி விட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காகத் தொடர்ந்து பொய்த் தகவல்களே கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.

பசப்படி: 1986ஆம் ஆண்டு மதுரை டெசோ மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வரவில்லை.

பதிலடி: 1986 டெசோ மாநாட்டில் ஈரோஸ் பாலகுமாரன், இ.பி.ஆர்.எல்.எஃப், பத்மநாபா, புளேட் உமா மகேசுவரன் யாருமே கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தம் பிரதிநிதிகளேயே அனுப்பினார்கள். பிரபாகரனும் தம் பிரதிநிதியை அனுப்பினார்.

பசப்படி: எல்லாம் முடிந்து மேலும் முடிவுறமோ? என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போது கூட அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.

பதிலடி: இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு அவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறிய பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.

பசப்படி: 2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிக்காமலே பிரபாகரன் இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார் என்று ரணில் சொல்லியுள்ளார்.

பதிலடி: இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு சூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்பட வில்லை. இத்திட்டத்தை ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை 2001 அக்டோபர் 31 ஆம் நாள் நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாற்றுத் திட்டம் குறித்து சிங்கள அரசு பேச மறுத்ததால்தான் பேச்சு வார்த்தை முறிந்தது. சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலக மறுத்தது தான் முறிவுக்குக் காரணமே தவிர பிரபாகரன் அல்ல.

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன்னின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சு வார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதால் விடுதலைப் புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்து கொள்ள வில்லை என்று கூறுவதைப் போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. இரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளே அவதூறு செய்வதாகும்.

பசப்படி: 2005இல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் பிரபாகரன் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்ன வென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த சனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத்தரத் தவறி விட்டார் என்று இரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த்தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைபிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பதிலடி: குடியரசுத் தலைர் தேர்தலில் இரணில் விக்ரமசிங்காவை ஆதரிக்கப் புலிகள் தவறி விட்டார்கள் என்பது கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டு. போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் இரணிலும் பிரபாகரனும் கையயழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு, நான்காண்டு காலம் பிரதமராக இருந்த இரணில் அந்த உடன்பாட்டில் எந்த ஒரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களே இந்தியாவிற்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களே வாங்கிக் குவித்தார். புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்தச் சதி செய்தார். இந்தக் காரணங்களால் அவரைத் தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்தப் பயனும் விளேயப் போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக பதவிகள் எதுவும் கூற விரும்பவில்லை.

பசப்படி: என்னையும் மாறனையும் 15.3.1989 அன்று, அன்றையப் பிரதமர் இராசீவ்காந்தி டில்லிக்கு அழைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி நீங்களும் மாறனும் வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், அதிக பட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளே நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் உறுதியளித்தார்.

பதிலடி: 1989ஆம் ஆண்டில் இராசீவ் காந்தி, கருணாநிதியையும் மாறனையும் அழைத்து பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து பேசி முடிவு காண வழி காணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்து திரும்பியதற்காக வைகோ மீது அடாத பழியைச் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்ய சதி நடைபெறுவதாகவும் புலம்பினார்.

பிரதமராக வி.பி.சிங் இருக்கும் போது தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ, அதற்கேற்ப இந்திய அரசு நடந்து கொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்த போது இவர் செய்தது என்ன? ஈழத் தமிழர்களின் உண்மைப் பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களேச் சேர்ந்தவர்களேயும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு சீர்குலைத்தவர் கருணாநிதியே.

பசப்படி: சகோதர யுத்தத்தின் காரணமாக மாவீரன் மாத்தையா, சிறி சபா ரத்தினம், பத்மநாபா, அவரோடு 10 போராளிகள், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வன், யோகீஸ்வரன், வாசுதேவா என்று பலரையும் மரணக்குழியிலே தள்ளியும், இலங்கையில் 2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த சில நாட்களுக்குள் 9.4.2004இல் கிழக்கு இலங்கையில் சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா. படைகளிடையே - இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துப் போட்டது...

பதிலடி: திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப் போன பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். அவருடைய கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சிச் சண்டையில் படுகொலை செய்யப்பட்டதைத் தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டை பற்றிப் பேசத் தகுதியற்றவர்.

பசப்படி: விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளேவுகள் எப்படியாயின; எங்கே போய் முடிந்தன என்பதை எண்ணிப் பார்த்து நாம் மெளனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மெளன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது?

பதிலடி: இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளே அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன் வராமல் மறைப்பதற்குத் துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை.

 

Pin It