தொலைகாட்சிகளும் கணிணியும் திரைப்படங்களும் நம் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் மறந்து போன சில பழந்தமிழர் விளையாட்டுகளை நினைவு கூற விரும்புகிறேன். பொதுவாக இவை நட்பு /அன்பு வலுப்பெற உதவுபவை.
1 . புனல் விளையாட்டு :
நீரில் விளையாடுவது.  சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.
2 . பந்து விளையாட்டு :
பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம்  செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.
3 . அசதியாடல் :
ஒருவரை ஒருவர்  பரிகாசம் செய்து விளையாடுவது
4 . அம்மானை
பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.
5 . ஊசல்
ஊஞ்சல் விளையாட்டு. ஆம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.
6 . கழங்கு
ஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது.
 
7 . கண் புதைந்து ஆடுதல்
8 . கறங்கு
கறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.
9 . குரவை
பெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது
10. சிறு சோறாக்கல்
கூட்டாஞ் சோறு ஆக்கல்
11 .  சிற்றில் செய்தல்
கடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்
12 . வட்டு
பொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)
13 . ஏறுகோள்
ஜல்லிக்கட்டு
14 . வள்ளை
உரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு
15 . சதவி
பட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டு.
இப்போதெல்லாம் நாம் விளையாட கூட கணிணியை நாடுவதால் கண் கெடுவதோடு  உடலும் கெடுகிறது.  உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்விளையாட்டுக்களை இனியாவது ஆடத் தொடங்கலாமா? 
Pin It