உழைப்பின்
உள்ளங் கைகளில்
தனக்கான கை ரேகை
கணித்துக் கொள்கிறது
எஜமானத்துவம்

வியர்வை கொட்டி
விதைத்து
களைப்பின் கதிர்கள்
அறுவடை செய்து
வலியால் லாபமடைந்து
மீண்டுமொரு
வெள்ளாமை விரும்பி
காத்திருக்கிறது
உழைப்பு

விடிவில்லா வறுமையின்
மகசூலுக்காக.

- கொ.மா.கோ.இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It