திருப்தியளிக்கத்தான்
செய்கிறது
புது வீடு கட்டும் சூழல்

சிவப்பு, சிவப்பாய்
உழைப்பின் இரத்த ஓட்டத்தை
நினைவில் கொணரும்
ஒட்டு மொத்த
செங்கற்களில் நடுநடுவே
பக்குவமாய் பிடித்தத்தில்
பற்றிக் கொள்கிறது
நிம்மதியின் சாந்து கலவை!

வெளிப்புற பூச்சுக்கென
கொட்டி வைத்த ஆற்று மணலில்
'கிச்சா''கிச்சா' தாம்பூலம்
விளையாடி மகிழ்கிறது
கூழாங் கற்கள் தொய்வின் துணையில்
இன்னமும் உயிர்பித்திருக்கும்
மீன் குஞ்சொன்றின் நினைவு!

- கொ.ம.கோ.இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It