பௌதிகப் பிரபஞ்சப்
பொதுமைகளைப்
பிளந்து
புனைகதைகள்
படைக்கத் தொடங்கியதொரு
விலங்கு

யுகங்களாய்ப்
பரிணமித்துவரும்
அதன் பிரக்ஞையை
எழுத்துக்களில்
நெருடித் திணிக்கிறது
மொழியியலின் நிர்பந்தம்

உருவகங்களென
அந்தரத்தில்
தொங்கவிடப்படுகிறது
பெயரறியா
விலங்கொன்றின்
இனம்புரியா
உயிரின் ரகசியம்...

- கலாசுரன்

Pin It