Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...


கோவைக் காவல்துறையின் சனநாயகப் படுகொலை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு 2010 பிப்ரவரி 6, 7 இருநாட்கள் கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் எழுச்சியுடன் நடந்தது. பல்லாயிரக்கணக்கில் திரளானோர் கலந்து கொண்டனர்.

        தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதி, மத, கட்சி உணர்வுகளைத் துறந்து “தமிழர்” என்ற ஒரே அடையாளத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற பிரகடனத்தை புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி முன்மொழிய கூடியிருந்தோர் கையொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஏற்றனர்.

        ஆனால் இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி மறுத்தது காவல் துறை. உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினார். ஆனால் அந்த அனுமதியில் திரு. பழ.நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட சிலரை அழைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர்.

        அதன் பிறகு, அம்மாநாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் உருவப்படங்கள், குறுந்தகடுகள், ஈழம் குறித்த நூல்கள் விற்கப்பட்டன என்று வழக்கறிஞர் கலையரசு, மருத்துவர் கிருட்டிணசாமி உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூவர் சிறைப்படுத்தப்பட்டனர்.

        எல்லாக் கொடுமைகளையும் விஞ்சக்கூடிய இன்னொரு கொடுமை, முன் அனுமதி பெறாமல் துண்டறிக்கைகள் வழங்கினார் என்று மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகும்.

        “எலும்புக்கூடுகள் மீதும் நடைப்பிணங்கள் மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு” என்று தலைப்பிட்ட படைப்பாளிகள் முன்னணியின் துண்டறிக்கை வழங்கப்பட்டதற்குத் தான் மேற்படி வழக்கு.

        துண்டறிக்கை கொடுப்பதற்குக் கூட முன் அனுமதி பெற வேண்டுமெனில் இங்கு என்ன சனநாயகம் வாழ்கிறது? அப்படியே முன் அனுமதி கோரினால் கலைஞர் புகழும் பாரதமாதா பசனையும் பாடும் துண்டறிக்கைகளுக்கு மட்டும் தானே அனுமதி கொடுப்பார்கள்!

        எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இதெல்லாம் முன் அறிகுறிகள்! இப்பொழுதே எழுந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

- தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு

Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப‌ இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான‌ பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும்.
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
தமிழ் (ammaa=அம்மா) English
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP